ட்ரீட்மென்ட் கூட ஆரம்பிக்கல அதுக்குள்ள இப்படியா? பவதாரணி குறித்து கண்ணீரில் ஹாஷினி

0
463
- Advertisement -

தற்போது சோசியல் மீடியா முழுவதும் இளையராஜா மகளின் இறப்பு செய்தி தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவர் இளையராஜா. இவர் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து உள்ளார். இவர் தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் இசையமைத்து உள்ளார். இவருடைய இசை திறமைக்கு பல விருதுகளை வாங்கி உள்ளார்.

-விளம்பரம்-

இவர் சினிமா உலகில் இசையமைப்பாளர், கவிஞர், பாடகர் என பல முகங்களைக் கொண்டவர்.
இதனிடையே இளையராஜா அவர்கள் ஜீவா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு கார்த்திகேயன், யுவன் சங்கர் ராஜா, பவதாரணி என்ற மூன்று பிள்ளைகள் உள்ளார்கள். இவர்களும் தன் தந்தையைப் போல இசையில் புலமை பெற்று வருகிறார்கள். இளையராஜாவின் குடும்பமே இசை குடும்பம் தான்.

- Advertisement -

பவதாரணி குறித்த தகவல்:

மேலும், இளையராஜாவின் மகள் பவதாரணி அவர்கள் மைடியர் குட்டி சாத்தான் என்ற படத்தின் மூலம் பாடகியாக சினிமா உலகிற்கு அறிமுகமானர். பின் இளையராஜாவின் இசையில் பாரதி திரைப்படத்தில் மயில் போல பொண்ணு ஒண்ணு என்ற பாடல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பவதாரணி. இந்த பாடலுக்காக இவர் தேசிய விருது உட்பட பல்வேறு விருதுகளை வாங்கி இருந்தார். பின் இவர் தமிழில் எண்ணற்ற பாடல்களை பாடியிருந்தாலும் அவர் குறிப்பாக தன்னுடைய தந்தை மற்றும் சகோதரர் படங்களில் தான் அதிகம் பாடியிருக்கிறார்.

பவதாரணி உடல்நிலை:

இவர் பாடுவது மட்டும் இல்லாமல் பல படங்களுக்கு இசையமைத்தும் இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் பவதாரணி உடல் நலக்குறைவு காரணமாக காலமாகி இருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பவதாரணிக்கு புற்றுநோய் இருந்திருக்கிறது. இதற்காக இவர் சமீப காலமாக இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வந்திருக்கிறார். கிட்டத்தட்ட கடந்த ஐந்து மாதங்களாக அவர் இலங்கையில் சிகிச்சை மேற்கொண்டு வந்து இருக்கிறார்.

-விளம்பரம்-

பவதாரணி இறப்பு:

அதேபோல் இளையராஜாவும் இலங்கையில்தான் இருந்திருக்கிறார். இவர் 28ஆம் தேதி வரை இருக்கும் மியூசிக் கான்செர்ட் நடைபெறுவதால் இவர் தன்னுடைய மகளை கவனித்துக் கொண்டு தன்னுடைய இசை வேலையும் செய்து இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் மூச்சு திணறல் ஏற்பட்டு பவதாரணி உயிரிழந்திருக்கிறார். தற்போது அவருக்கு வயது 47. இன்று மாலை அவருடைய உடல் சென்னைக்கு வருகிறது.

ஹாசினி வீடியோ:

இவருடைய இறப்பு கோலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பலரும் இளையராஜா குடும்பத்துக்கு இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் இளையராஜாவின் உறவினரும் நடிகையுமான ஹாசினி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், பவதாரணிக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் அவருடைய கேன்சர் நாலாவது ஸ்டேஜில் இருப்பதை கண்டுபிடிக்கப்பட்டது. இயற்கை முறையில் சிகிச்சை எடுப்பதற்காக தான் இவர் இலங்கை சென்றிருந்தார். ஆனால், அவர் சிகிச்சை எடுப்பதற்கு முன்பே இறந்துவிட்டார் என்று கண்ணீர் மல்க பேசி இருக்கிறார். இவர் ஹாசினி நிறைய விஜய் டிவி, சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடித்துக் கொண்டு வருகிறார்.

Advertisement