‘ஷோக்கு வரதுக்கு முன்னாடியே என்ன காலி பண்ணனும்னு பேசி வச்சிட்டு வந்தாங்க’மைனா மற்றும் மணிகண்டனின் உண்மை முகத்திரையை கிழித்த போட்டியாளர்.

0
407
mani
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது இறுதிகட்டத்தை நெருங்கி இருக்கிறது. இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி,அசல் கோளாறு, ராபர்ட், குயின்சி, ஜனனி, ராம், ஆயிஷா, தனலட்சுமி, மணிகண்டன்,ரச்சித்தா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். தற்போது அசீம், விக்ரமன், ஷிவின், கதிரவன், மைனா நந்தினி, அமுதவனான்,,Adk என்று 7 பேர் மட்டும் விளையாடி வருகின்றனர்.

-விளம்பரம்-
Adk

இதில் அமுதவாணன், Adk ஆகிய இருவரில் யாராவது ஒருவர் வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் யாரும் எதிர் பாராத விதமாக ரச்சிதா வெளியேறி இருந்தது பிக் பாஸ் மத்தியில் பெரும் ஷாக்கை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் இந்த சீசனின் கடைசி நாமினேஷன் பிராசஸ் நடைபெற்றது. அதில் ADK வெளியேறினார். இந்த நிலையில் எலிமினேஷன் ஆகிய போட்டியாளர்கள் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து கொண்டிருக்கின்றனர்.

- Advertisement -

மகேஸ்வரி கூறிய அதிர்ச்சி செய்தி :

இந்த நிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் வவிருந்தினராக வந்திருக்கும் போட்டியாளர்களில் ஒருவர் நடிகை மஹேஸ்வரி. இவர் நேற்று அசீம் மற்றும் மணிகண்டனுடன் பேசிக்கொண்டிருக்கும் போது எலிமினேஷன் குறித்து கருத்து தெரிவித்த போது அது வாய் தகராறாக மாறியது. இந்த சண்டைக்கு பின்னர் விக்ரமனுடன் அமர்ந்திருந்த மகேஸ்வரி பிக் பாஸ் ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியடையும் படி ஒரு விஷயத்தை கூறினார்.

மைனா செய்த சூழ்ச்சி :

அவர் கூறியதாவது இந்த சீசன் போட்டியாளர்களான மணிகண்டன் மற்றும் மைனா பிக் பாஸ் வீட்டிற்குள் வரும்போதே தன்னை குறிவைக்க கூறினார். அதனை தான் போனில் Loudspeaker மூலம் கேட்டதாகவும் கூறினார். மேலும் மைனா பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைவதற்கு முன்பாக தொலைபேசியில் மைனா தன்னை அழைத்து 10 வருடங்களுக்கு முன்னர் ரட்சிதா தன்னை எப்படி கேவலப்படுத்தினார் என்று போனில் சொன்னதாக கூறினார் என்றும்.

-விளம்பரம்-

மகேஸ்வரியை முதுகில் குத்திய மைனா :

ஆனால் அந்த விஷயம் குறித்து தற்போது வரை யாரிடமும் சொல்லவில்லை ஆனால் அதுதான் நான் செய்த தவறு என்று நினைக்கிறேன் என்று கூறினார். மேலும் போனில் இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன், மைனா சக போட்டியாளரான மணிகண்டனிடம் மஹேஸ்வரி மிகவும் வலிமையானவர். நன்றாக பேசுவாள் முதலில் அவளை மூலைப்படுத்தி அகற்ற வேண்டும் என்று கூறியதை மகேஸ்வரி Loudspeakerல் கேட்டதாகவும் ஆனால் அதனை பற்றி நான் மைனாவிடம் கேட்கவில்லை .

விமர்சிக்கும் நெட்டிசன்கள் :

ஆனால் இப்போது மைனாவின், மணிகண்டனும் செய்வதை பார்த்தல் நான் அப்படி செய்த்து தவறு என்று தோன்றுகிறது என்க கூறினார். இந்த வீடியோ வைரலானதை அடுத்து மைனாவையும் மணிகண்டனையும் கடுமையாக நெட்டிசன்கள் விமர்சித்து திட்டி வருகின்றனர்.

Advertisement