இந்த வாரமும் வித்யாசமாக நடந்தப்பட்ட எலிமினேஷன்.! வெளியான செம தகவல்.!

0
11014
kamal
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் முழுக்க சண்டையும் சர்ச்சையுமாகவே சென்று கொண்டிருந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இது வரை பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா மிதுன் என்று 4 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர். மேலும், 6வது வாரத்தை எட்டியுள்ள நிலையில் இந்த வாரத்திற்கான நாமினேஷன்துவங்கியது.

-விளம்பரம்-
sakshi

இந்த வார தலைவர் தர்ஷனை தவிர மற்ற போட்டியாளர்கள் நாமினேஷனில் இடம்பெற்றனர். மேலும், இந்த வார நாமினேஷன் லிஸ்டில் சாக்க்ஷி, கவின், அபிராமி, ரேஷ்மா, மதுமிதா ஆகியோர் இடம்பெற்றுள்னர். இந்த வாரம் சாக்க்ஷி தான் வெளியேறுவார் என்று பலரும் எண்ணி வரும் நிலையில் தற்போது வியப்பூட்டும் திருப்பங்கள் நடந்து வருகிறது.

இதையும் பாருங்க : அணைத்து போட்டியாளர்களையும் வெச்சி செய்யும் கமல்.! அநியாயம் பண்ராருங்க.! 

- Advertisement -

இந்த வார ஆரம்பத்தில் சாக்க்ஷிக்கு குறைவான வாக்குகள் பதிவாகி கடைசி இடத்தில் இருந்தார். ஆனால், இரண்டு நாட்களாக சாக்க்ஷிக்கு அதிகப்படியான வாக்குகள் வர தற்போது மூன்றாவது இடத்தில் இருந்து வந்துள்ளார் சாக்க்ஷி. எனவே, இறுதி நேரத்தில் ரேஷ்மாவிற்க்கு குறைவான வாக்குகள் பதிவாகி இந்த வாரம் வெளியேற்றப்பட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் இன்றைய நிகழ்ச்சியில் எலிமினேஷன் வித்தியாசமான முறையில் நடைபெற்றுள்ளது. இந்த வாரம் எலிமினேஷனில் இடம்பெற்ற கவின், அபிராமி, சாக்க்ஷி, ரேஷ்மா ஆகியோர் ஆகியோருக்கு கையில் விளங்க மாட்டப்பட்டுள்ளது. அதற்கான சாவி ஸ்டோர் ரூமில் வைக்கப்பட்டுள்ளது.

-விளம்பரம்-

பின்னர் கவின், அபிராமி, சாக்க்ஷி ஆகியோர் காப்பற்றபட்டனர். அதன் பின்னர் சாக்க்ஷி நான் வெளியே போகிறேன் என்று கூறுகிறார். ஆனால், ரேஷ்மா வெளியேற்றபட்டதாக இறுதியாக அறிவிக்கப்பட்டு விடுகிறது. ரேஷ்மா வெளியேறியதால் தர்ஷன் மற்றும் முகென் இருவருமே கண்கலங்கி அழுதுள்ளனர்.

Advertisement