பிக் பாஸ் குறித்து விஜய் டிவி வெளியிட்ட புதிய ப்ரோமோ – கடுப்பான ரசிகர்கள்.

0
32331
biggboss
- Advertisement -

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த மாபெரும் பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் இன்னும் வாரங்களில் துவங்க இருக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தமிழை போலவே ஹிந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சமயத்தில் அனைத்து மொழிகளிலும் பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கப்பட்டு இருந்திருக்கும்.

-விளம்பரம்-

ஆனால், தற்போது கொரோனா பிரச்சனை காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கப்படாமல் இருக்கிறது. அவ்வளவு ஏன் இதுவரை போட்டியாளர்கள் பற்றிய எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. தமிழை போலவே தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியும் இதுவரை 3 சீசன்களை கடந்து உள்ளது. தெலுங்கில் பிக் பாஸ் 4 நிகழ்ச்சி கடந்த செப்டம்பர் 6-ம் தேதி மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்கியது.

- Advertisement -

அதேபோல தமிழில் இதுவரை இரண்டு ப்ரோமோக்கள் வெளியாக இருக்கிறது. இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சி விரைவில் துவங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த சீசனில் ஷிவானி, அர்ச்சனா, ரியா ராஜ், அணு மோகன், ஜித்தன்ரமேஷ், ரம்யா பாண்டியன் என்று பலர் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், அடுத்த மாதம் 4 ஆம் தேதி பிக் பாஸ் துவங்கும் என்றும் கூறப்படுகிறது.

இப்படி ஒரு நிலையில் பிக் பாஸின் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் விஜய் டிவியின் பிரபலங்கள் அனைவரும் சேர்ந்து கொரோனா நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கையில் கிருமிநாசினி போட்டுக்கொள்வது முகக் கவசம் அணிவது என்று அந்த வீடியோ அமைந்திருந்தது. மேலும் இந்த வீடியோவின் இறுதியில் வழக்கம்போல பிக் பாஸ் துவங்கும் தேதி அறிவிக்கப்படாமல் விரைவில் என்று போட்டு முடிக்கப்பட்டது. இதனை கண்ட ரசிகர்கள் பலரும் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் விரைவில் என்று சொல்வீர்கள் என்று கடுப்பாகி இருக்கிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement