Bully Gangஐ தெறிக்கவிட்ட அர்ச்சனாவிற்கு ஆதரவாக முன்னாள் வெற்றியாளர் ஆரி போட்ட பதிவு.

0
480
- Advertisement -

தமிழில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 36 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். மேலும், முதல் நாளில் இருந்தே பிக் பாஸ் வீடு அனல் பறந்து கொண்டு இருக்கிறது.

-விளம்பரம்-

அதேபோல் நிகழ்ச்சியில் இதுவரை அனன்யா, பவா, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன் ஆகியோர் வெளியேறி இருந்தார்கள். பின் கடந்த சனிக்கிழமை பிரதீப் Red Card கொடுத்து வெளியேற்றப்பட்டார்.
காரணம், பிரதீப்பால் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று வீட்டில் இருந்த பெரும்பாலான பெண்கள் கமலிடம் முறையிட்டததால் அவரை வீட்டில் இருந்து வெளியேற்றினார் கமல். அதன் பின் அன்னபாரதி வந்த வேகத்திலேயே நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்த வார கேப்டனாக மாயா தேர்வாகி இருக்கிறார்.

- Advertisement -

பிக் பாஸ் 7:

பின் அவர் அர்ச்சனா, தினேஷ், விசித்ரா, கூல் சுரேஷ், மணி, ரவீனா ஆகியோரை ஸ்மால் பிக் பாஸ் வீட்டிற்கு அனுப்பி இருக்கிறார். மேலும், மாயா கேப்டன் ஆன முதல் நாளிலிருந்தே பிக் பாஸ் வீடு அனல் பறந்து கொண்டிருக்கிறது. அது மட்டும் இல்லாமல் நிகழ்ச்சி தொடக்கத்தில் இருந்தே மாயா- பூர்ணிமா இருவரும் கேங் சேர்த்துக்கொண்டு மற்றவர்களை கிண்டல் அடிப்பது, கேலி செய்வது, சண்டை, வம்பு இழுப்பது என்று பல வேலைகளை செய்து வருகிறார்கள்.

மாயா- பூர்ணிமா கேங்க்:

அதிலும் இரண்டு வாரங்களாக மாயா- பூர்ணிமா இருவரும் செய்த வேலைகள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் கடுப்பேற்றி இருக்கிறது. குறிப்பாக, பிரதீப் ஆண்டனி வெளியேறியதற்கு மாயா- பூர்ணிமா இருவரும் தான் முக்கிய காரணம் என்று பலரும் கூறுகிறார்கள். அதோடு வைல்ட் கார்டு மூலம் நுழைந்த ஐந்து போட்டியாளர்களையும் மாயா- பூர்ணிமா இருவரும் வைத்து செய்கிறார்கள். அதிலும் குறிப்பாக அர்ச்சனாவை இருவரும் இழுத்துக் கொண்டிருக்கிறார்கள். முதல் நாளில் இருந்தே அர்ச்சனா எதற்கெடுத்தாலும் அழுது கொண்டே இருந்தார்.

-விளம்பரம்-

களமிறங்கிய அர்ச்சனா:

இதுதான் வாய்ப்பு என்று எல்லா விதத்திலும் அர்ச்சனாவை மாயா டார்கெட் செய்து வருகிறார்கள். மேலும், நேற்றைய எபிசோடில் கூட மாயா எப்படி அர்ச்சனாவை தெறிக்க விடுகிறேன் பார் என்று சொல்லி அவருக்கு வேலை மேல் வேலை வைத்துக் கொண்டே இருந்தார். இதனால் கோபத்தில் கொந்தளித்த அர்ச்சனா கடுமையாக பேசி மாயாவை வெளுத்து வாங்கி இருக்கிறார். இதனால் ரசிகர்கள் பலருமே அர்ச்சனாவை பாராட்டி இருக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் அர்ச்சனா இப்ப தான் நீங்க பாமுக்கு வந்து இருக்கீங்க, இப்படியே விளையாடுங்கள் என்றெல்லாம் ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.

நடிகர் ஆரி பதிவு:

தற்போது பிக் பாஸ் வீட்டில் மாயா- பூர்ணிமா டீமுக்கு எதிராக அர்ச்சனா களம் இறங்கி இருக்கிறார். இதனால் பலருமே அர்ச்சனாவிற்கு குரல் கொடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முன்னாள் டைட்டில் வின்னர் ஆரி அவர்கள் அர்ச்சனாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறார். இது தொடர்பாக அவர் தன்னுடைய twitter பக்கத்தில், நீங்கள் இப்பதான் விளையாட ஆரம்பித்திருக்கிறீர்கள். தைரியமாக விளையாடுங்கள் என்று கூறி இருக்கிறார்.

Advertisement