பிக் பாஸ் பைனலுக்கு இதனால தான் போகல, நிக்சன் பற்றி இனி – உண்மைகளை உடைத்த ஐசு.

0
189
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் ஐஸு. இவர் நடன இயக்குனர் மற்றும் பிக் பாஸ் போட்டியாளருமான அமீர்க்கு நெருக்கமான உறவினர். அமீர் மூலமாக தான் ஐசுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்ததாகவும் கூறப்பட்டது. சமீபத்தில் தான் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி முடிவடைந்தது. இதில் அர்ச்சனா டைட்டில் பட்டத்தை வென்றார். மேலும், ஆரம்பத்தில் நிகழ்ச்சியில் ஐசு நன்றாக தான் விளையாடிக் கொண்டு வந்தார்.

-விளம்பரம்-

பின் நிக்ஸனுடன் அவர் செய்த சேட்டைகள் தான் ரசிகர்கள் மத்தியில் வெறுப்பை ஏற்பட்டிருந்தது. நிக்சன் ஐஸ்வை மட்டுமில்லாமல் பிக் பாஸ் வீட்டில் இருந்த மற்ற பெண்களையும் உருவ கேலி, கிண்டல் செய்வது என்ற வேலை எல்லாம் செய்திருந்தார். பின் ஐசுவை காதலிப்பதாக சொல்லி அவர் செய்த எல்லைகளுக்கு அளவே இல்லை. இருவரும் கண்ணாடி பக்கத்தில் உட்கார்ந்து ஹாட் வரைவது, நெருக்கமாக கைகோர்த்து நடப்பது, எப்பொழுதும் இருவருமே ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருப்பது என்று இருந்தார்கள்.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐஷு:

இது பார்வையாளர்கள் மத்தியில் வெறுப்பை ஏற்றி இருந்தது. ஒரு கட்டத்தில் நிக்சன்-ஐசு இருவரும் முத்தம் கொடுத்து இருந்தார்கள். இது மிகப்பெரிய அளவில் சர்ச்சையாகி இருந்தது. அதற்குப்பின் ஏதோ சில காரணங்களால் ஐசு வெளியேறிவிட்டார். அதுமட்டுமில்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது ஐசுவின் நடவடிக்கைகளை பார்த்து அவருடைய பெற்றோர்கள் பிக் பாஸ் டீமிடம், என் மகளை வெளியே அனுப்பி விடுங்கள். குடும்பமானம் போகிறது என்றெல்லாம் தகவல் வெளியாகின்றது. இது தொடர்பாகவும் அவர்கள் பேட்டி அளித்து இருந்தார்கள்.

நிகழ்ச்சிக்கு பின் ஐஷு:

மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி நாளில் கூட ஐசு கலந்து கொள்ளவில்லை. இதுகுறித்து பலவித சர்ச்சைகளும் எழுந்திருந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஐசு குறித்து பல மோசமான விமர்சனங்கள் வந்தது. பின் அவர் மன்னிப்பு கடிதம் ஒன்றையும் போட்டு இருந்தார். இந்த நிலையில் பிக் பாஸ் இறுதி நிகழ்ச்சிக்கு வராதது குறித்து பேட்டியில் ஐஸ் கூறி இருப்பது, உடல் அளவிலும் மனதளவிலும் சரியில்லாமல் இருந்தேன். பிக் பாஸ் விட்டு வெளியில் வந்ததும் மனதளவில் கஷ்டப்பட்டேன். எனக்கு ஆறுதலாக இருந்தது என்னுடைய தாத்தா பாட்டி தான்.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வராத காரணம்:

நான் அழுது கொண்டிருந்த சமயத்தில் ஜாலியாக ஆறுதல் கூறி என்னிடம் பேசி இருந்தார்கள். மன்னிப்பு கடிதத்தில் கூட இதை நான் குறிப்பிடுகின்றேன். மனதளவில் மீண்டும் வர எனக்கு கொஞ்சம் நேரம் தேவைப்பட்டது. அதனால்தான் பிக் பாஸ் பைனலுக்கு வர முடியவில்லை என்று கூறியிருந்தார். ஏற்கனவே பேட்டியில் ஐசுவின் தந்தை, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டாம் என்று சொன்னோம். ஆனால், ஐஷு கேட்கவில்லை. இத்தனை வருடங்களாக எந்த ஒரு நெகட்டிவ் விமர்சனத்தையும் நாங்கள் பார்த்ததில்லை. ஆனால் ஐஷு பிக் பாஸ் போனதற்கு பிறகு எங்கள் வாழ்க்கையை மொத்தமாக மாறிவிட்டது.

ஐஷு குறித்து சொன்னது:

முழுக்க முழுக்க நெகட்டிவ் விமர்சனங்கள் தான் வந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகு ஐசு போட்ட மன்னிப்பு கடிதம் எனக்கு தெரியாது. முழு மனதாக தான் அவர் அந்த கடிதம் எழுதினார். ஒரு போட்டியாளரை உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அவரை விமர்சிக்க வேண்டாம். அவர்களுடைய குடும்பத்தையும் சேர்த்து விமர்சிப்பது ரொம்பவே தவறானது. எங்களுடைய வாழ்க்கையில் ஒரு பெரிய அலையடித்து ஓய்ந்தது போல இருக்கிறது. என்னுடைய மொத்த குடும்பமும் முழு மன உளைச்சலில் இருந்தது. என்ன நடந்தாலுமே ஐசு என்னுடைய மகள். அவளுடைய கனவை நிறைவேற்றுவதற்காக எல்லா கதவுகளும் மூடப்பட்டாலும் அந்த அறையில் இருக்கும் ஜன்னல் ஆவது திறந்து வைப்பேன் என்று கூறியிருந்தார்.

Advertisement