‘வாடா போடானு கூப்பிட்ற வேல வச்சிக்காத’ – ஆயீஷாவை அழ வைத்த போட்டியாளர். யார் பாருங்க.

0
308
- Advertisement -

அனைவரும் ஆவலுடன் காத்து கொண்டு இருந்த பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி நேற்று விஜய் டிவியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி இருக்கிறது. இதனால் ரசிகர்கள் மத்தியில் உற்சாகம் ஏற்பட்டு இருக்கிறது. அதேபோல் கமல் தான் இந்த சீசனையும் தொகுத்து வழங்கி இருக்கிறார்.இந்த முறை நிகழ்ச்சியில் கொஞ்சம் வித்தியாசமாக எடுக்க முயற்சி செய்திருக்கிறார்கள். அந்த வகையில் பொது மக்களும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த முறை நிகழ்ச்சியின் போட்டியாளர்களை தேர்வு செய்வதில் சேனல் தரப்பில் இருந்து கூடுதல் கவனம் செய்யப்பட்டு இருந்தார்கள்.

-விளம்பரம்-

இந்த முறை நிகழ்ச்சியை ஒரே நேரத்தில் டிவியிலும், ஓடிடியிலும் ஒளிபரப்பாகி வருகிறது. அதாவது, இந்த நிகழ்ச்சி தினமும் டிவியில் ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகும்.நிகழ்ச்சியில் ஜிபி முத்து, அசீம், அசல் கொலார், ராபர்ட், ஷெரினா, ராம் ராமசாமி, ஆர்யன் தினேஷ் என்ற ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி அரவிந்த், விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி என பல பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

- Advertisement -

இந்த முறை நிகழ்ச்சி ஆரம்பத்தில் 20 போட்டியாளர்கள் களம் இறங்கி இருக்கின்றனர். மேலும், நேற்று நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் குறித்து கூறப்பட்டு இருந்தது. இந்த முறையும் பலர் புதிய முகங்களாக இருக்கின்றனர். மேலும், சில போட்டியாளர்கள் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக உள்ளே வர இருப்பதாகவும் கூறப்படுகிறது. இன்று முதல் நாள் நிகழ்ச்சி தொடங்கி விட்டது.

போட்டியாளர்கள் எல்லோருமே தங்களை பற்றி அறிமுகம் செய்து கொண்டு வழக்கம்போல் முதல் நாளில் ஜாலியாகவும் அன்போடும், பாசத்தோடும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.இந்த நிலையில் முதல் நாளிலேயே நான்கு போட்டியாளர்கள் நாமினேஷன் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, இன்று முதல் நாளே பிக் பாஸ் வீட்டில் டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது.

-விளம்பரம்-

அதில் ஒவ்வொரு போட்டியாளரும் தங்களை அதிகம் கவராத மூன்று பேர்களை கூற வேண்டும் என்று பிக் பாஸ் கூறியிருக்கிறார். இதனை அடுத்து ஒவ்வொரு போட்டியாளர்களுமே ஒரு காரணத்தை சொல்லி போட்டியாளர்கள் பெயர்களை கூறியிருந்தார்கள்.அந்த வகையில் போட்டியாளர்களின் அதிக வாக்குகளை பெற்று ஆயிஷா, சிவின் கணேஷ், ஆர் ஜே மகேஸ்வரி, அமுதவாணன் பெற்றிருக்கிறார்கள். இதனை அடுத்து இந்த நான்கு பேரும் தான் அடுத்த வாரம் நடைபெறும் நாமினேஷன் பட்டியலில் நேரடியாக இடம் பெறுகிறார்கள் என்று பிக் பாஸ் அறிவித்திருக்கிறார்.

பொதுவாக ஆரம்ப நாட்களில் பிக் பாஸ் வீடு வானத்தை போல படத்தை போல தான் இருக்கும் ஆனால், போக போக தான் கலவர பூமியாக மாறும். அந்த வகையில் சமீபத்தில் வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஆயிஷாவை ஆயிஷா மற்றும் அசல் ஆகிய இருவரும் பேசிக் கொண்டிருக்கையில் இனிமேல் என்னை வாடா போடா என்றெல்லாம் அழைக்காதீர்கள் என்று அசல் சொல்ல தனக்கு யாராவது நெருக்கமாக தோன்றினாள் அப்படித்தான் அழைப்பேன், சரி இனிமேல் உங்களை வாங்க போங்க என்று அழைக்கிறேன் என்று ஆயிஷா கூறிவிட்டு செல்கிறார். பின் தனியாக அமர்ந்து கொண்டு ஆயிஷா அழ அவருக்கு சக போட்டியாளர்கள் ஆறுதல் கூறியிருக்கிறார்கள்

Advertisement