பிக் பாஸ் வீட்டில் மீண்டும் சேரன் மற்றும் வனிதா.! எப்போ தெரியுமா.! வனிதா போட்ட ட்வீட்.!

0
3340
cheran-vanitha
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. நேற்றைய நிகழ்ச்சியில் இருந்துதர்ஷன் வெளியேற்றப்பட்டதால் இந்த சீசனில் லாஸ்லியா, சாண்டி,முகென் ,ஷெரின் ஆகியோர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இன்னும்7 நாட்களில் இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் என்பது தெரிய வந்துவிடும்.

-விளம்பரம்-

நேற்றைய நிகழ்ச்சியில் தர்ஷன் வெளியேறி இருந்துதான் ரசிகர்களுக்கும் சக போட்டியாளர்களுக்கும் பெரும் அதிர்ச்சியாக அமைந்து இருந்தது. கடந்த வாரம் ஷெரின் தான் வெளியேறுவார் என்று பலரும் எதிர்பார்த்து வந்த நிலையில் தர்ஷன் வெளியேற்றப்பட்டது மிகப் பெரிய ஏமாற்றமாக கருதப்பட்டு வருகிறது. இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் விஜய் டிவியையும் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

இதையும் பாருங்க : நானும் முகெனும் நெருக்கமா இருக்கிற மாதிரி வீடியோ போடு.! மீரா மிதுனின் அடுத்த ரகசிய ஆடியோ.!

- Advertisement -

அதேபோல இந்த சீசனில் தான் இறுதிப்போட்டிக்கு இரண்டு ஆண்களும் இரண்டு பெண்களும் தகுதியாகி உள்ளார்கள். முதல் சீசனில் ஆண்(ஆரவ்) டைட்டில் வின்னர் ஆகியிருந்த நிலையில் இரண்டாவது சீசனில் பெண்(ரித்விகா) டைட்டில் வின்னர் ஆக வந்திருந்தார். எனவே, இந்த சீசனில் வெற்றி பெறப் போவது ஆணா இல்லை பெண்ணா என்ற மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

-விளம்பரம்-

மேலும், கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றிய பல்வேறு போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து சென்ற வண்ணம் இருந்தனர். இந்த நிலையில் சேரன் மற்றும் வனிதா பிக் பாஸ் வீட்டிற்குள் நாளை வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை வனிதாவும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


Advertisement