தாமரை – சின்ன பொண்ணுவின் நாட்டுப்புற பஞ்சாயத்தை தீர்த்து வைத்த கமல்.

0
809
BB
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் ஒரு வாரத்தை கடந்து இரண்டாம் வாரத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. முதல் ஒரு வாரத்தில் போட்டியாளர்கள் அனைவருமே கொஞ்சம் ஜாலியாக தான் இருந்து வந்தனர். அதேபோல வீட்டில் பெரிதாக சண்டையோ சர்ச்சையை எழவில்லை. இடையில் நமிதா மாரிமுத்து மற்றும் தாமரைச்செல்வி ஆகிய இருவருக்கு மட்டும் லேசாக சண்டை எழுந்தது. ஆனால், சிறிது நேரத்திலேயே அதுவும் சமாதானத்தில் முடிந்துவிட்டது.

-விளம்பரம்-

முதல் வாரத்தில் போட்டியாளர்களுக்கு கடந்து வந்த பாதை டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் போட்டியாளர்கள் அனைவரும் தாங்கள் கடந்து வந்த பாதை குறித்து பேசி இருந்தார்கள். அதிலும் குறிப்பாக திருநங்கையான நமிதா மாரிமுத்து பேசியது பலரையும் சோகத்தில் ஆழ்த்தி இருந்தது. இப்படி ஒரு நிலையில் கடந்த சனிக்கிழமை நமிதா மாரிமுத்து சில தவிர்க்கமுடியாத காரணத்தால் வெளியேறிவிட்டதாக அறிவித்தனர்.

- Advertisement -

கடந்த வாரம் நாமினேஷன் நடைபெறாததால் எலிமினேஷன் இல்லை என்று அறிவிக்கப்பட்டது. இப்படி ஒரு நிலையில் இந்த வாரம் நடைபெற்ற நாமிநேஷனில் இந்த வார தலைவர் தாமரை மற்றும் பாவனியை தவிர 15 பேர் நாமினேட் ஆகியுள்ளனர். இதில் யார் வெளியேறப் போகிறார்கள் என்ற எதிர்ப்பு நிலவி வருகிறது.

நேற்றோடு கடந்து வந்த பாதை டாஸ்க் முடிந்த நிலையில் அடுத்த டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் போட்டியாளர்கள் இந்த வாரம் வீட்டில் ஜொலித்த போட்டியாளர் யார் ? காணாமல் போன போட்டியாளர் யார் என்பதை கூறினர். இது இரண்டாம் வாரம் என்பதால் இன்று எலிமினேஷனில் இருந்து யார் தப்பித்து இருக்கிறார் என்பதை கமல் அறிவிப்பாரா என்பதை பாப்போம்.

-விளம்பரம்-
Advertisement