வழக்கறிஞ்சராக இருந்த போதே ஒரு நாளைக்கு இவ்வளவு சம்பாதித்தாரா கானா பாலா – அந்த பணியை விட்ட காரணம் இதுதான்.

0
327
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது ஐந்தாவது வாரம் தொடங்கி இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.

-விளம்பரம்-

மற்ற சீசன்களை போல இந்த சீனிலும் மக்களுக்கு பரிட்சியமான மற்றும் பரிட்சியமில்லாத போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். அதேபோல் இந்த சீசனையும் கமல் தான் தொகுத்து வழங்கி வருகிறார். முதல் நாள் காலையிலேயே பிக் பாஸ் வீட்டுக்குள் கன்டன்ட்டை தொடங்கி விட்டார்கள். மேலும், இந்த சீசனில் வித்தியாசமாக இரண்டு வீடுகளுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி உள்ளது. தற்போது இரண்டு வீட்டிலுமே போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளும் அளவிற்கு சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

- Advertisement -

பிக் பாஸ் 7 நிகழ்ச்சி:

மேலும், நேற்று ஐந்து பேர் வைல்ட் கார்ட் போட்டியாளர்களாக பாடகர் கானா பாலா, பட்டிமன்ற பேச்சாளர் அன்ன பாரதி, விஜே அர்ச்சனா, நடிகர் தினேஷ் காமராஜ், ஆர்.ஜே.பிராவோ என்ட்ரி ஆகி இருக்கிறார்கள். அதில் அதிகமாக பேசப்பட்டது கானா பாலாவின் என்ட்ரி தான். அவர் பாடிக்கொண்டே பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தது அதிகமாக ரசிகர்களை கவர்ந்திருந்தது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான கானா பாடகராக திகழ்பவர் பாலா.

பாலாவின் சினிமா பயணம்:

இவருக்கு சிறு வயதிலிருந்தே கானா பாடுவதில் அதிக ஆர்வம் கொண்டவர். இவரது உண்மையான பெயர் பாலா முருகன். இவரை கானா குயில் கிங் பாலா என்றும் அழைப்பார்கள். இவர் கல்லூரியில் இருக்கும் போதே பல பாடல்களை பாடி இருக்கிறார். அதன் பின்னர் படித்து முடித்துவிட்டு வழக்கறிஞராக பணியாற்றி இருந்தார். வழக்கறிஞராக இருக்கும் போதே ஒரு நாளைக்கு 1000 முதல் 1500 வரை சம்பாதித்து இருந்தார். . அப்போது ஒரு நிகழ்ச்சியை நடத்தினால் இவருக்கு 50 முதல் 80 ஆயிரம் வரை வருமாம்.

-விளம்பரம்-

பாலா பாடிய பாடல்கள்:

அதன் பின்னர் தான் இவருக்கு சினிமாவில் பாடும் வாய்ப்பு கிடைத்ததாம். பின் இவர் கானா கலை நிகழ்ச்சிகளை நடத்தும் குழுவில் ஒரு தலைமை பொறுப்பில் இருந்தார். அந்த நிகழ்ச்சிக்கு வரவு செலவு கணக்கெல்லாம் இவர் தான் பார்ப்பாராம்ஒரே நேரத்தில் வழக்கறிஞராகவும் பாடகராகவும் இருக்க முடியாது என்பதால் வழக்கறிஞர் தொழிலை விட்டுள்ளார். சினிமாவில் இவருக்கு ஒரு படத்திற்கு 1 லட்சம் முதல் சம்பளம் கிடைத்துள்ளது.

ஆனால், சம்பாதித்த பணத்தை தான் சேமித்து வைத்தது இல்லை. அவசர செலவுக்கு மட்டும் வைத்தது 10 ஆயிரம் வங்கி கணக்கில் இருக்கும். நான் பர்ஸ் கூட பயன்படுத்துவது இல்லை. இப்போது கூட என் பாக்கெட்டில் கர்ச்சீப் மட்டும் தான் இருக்கிறது. பணத்தைவிட நம்பிக்கையும் திறமையும் தான் பெருசு என்று கூறியுள்ளார் பாலா. மேலும், இவர் அட்டகத்தி என்ற திரைப்படத்தில் ஒரு நடுக்கடல, ஆடிப் போன ஆவணி போன்ற பாடல்களின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார்.

தேர்தலில் பாலா:

அதனை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு பாடி இருக்கிறார். கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் சமீபத்தில் தமிழகத்தில் நடந்த கவுன்சிலர் தேர்தலுக்கு கானா பாலா போட்டியிட்டு இருந்தார். ஆனால், 2000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி பெற்றார். பின் இடையில் இவருக்கு பெரிதாக வாய்ப்புகள் இல்லாததால் கிடைக்கும் படங்களில் பாலா நடித்தும், பாடி கொண்டும் இருந்தார். தற்போது இவர் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் இவர் நீடித்து இருப்பாரா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement