இது தான் தமிழ் வளர்ச்சியா ? ஏ ஆரின் ‘தமிழணங்கு’ பதிவிற்கு அவரின் தமிழ் பாடல்கள் மூலமே பதிலடி கொடுத்த காயத்ரி ரகுராம்.

0
781
gayathri
- Advertisement -

ஆங்கில மொழிக்கு மாற்றாக இந்தி மொழியை பயன்படுத்த வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்து இருக்கும் நிலையில் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் தமிழ் குறித்து போட்டுள்ள பதிவு பெரும் வைரலாகி வருகிறது. இந்திய அளவில் புகழ் பெற்ற திரைப்பட இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான். தமிழ், ஹிந்தி, ஆங்கிலம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களுக்கு இசையமைத்து உள்ளார். மேலும், இரண்டு ஆஸ்கர் விருதை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றவர். மேலும், உலக அளவில் புகழ்பெற்ற இசை அமைப்பாளராக ஏ ஆர் ரகுமான் திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-180-743x1024.jpg

இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான தமிழ் மீது தீராத காதல், அன்பும் கொண்டவர். தன்னுடைய தமிழன் என்ற அடையாளத்தை எங்கேயும் விட்டுக்கொடுக்காதவர். பல மேடைகளில் தமிழுக்காக இவர் குரல் கொடுத்திருக்கிறார். மேலும், தமிழ் தெரியாத இடங்களிலும் இவர் தன் தாய்மொழி தமிழில் பேசி இருக்கிறார். முக்கியமாக தமிழர் பிரச்சனை பலவற்றில் குரல் கொடுத்திருக்கிறார். அதோடு வட இந்தியா விருது வழங்கும் விழாக்கள் பலவற்றில் ஏ ஆர் ரகுமான் தமிழில் தான் பேசி இருக்கிறார்.

இதையும் பாருங்க : ‘வெற்றி என்பது இது தான்’ – பிக் பாஸில் இருந்து வெளியேறிய பின் தனது புகைப்படத்தை பதிவிட்டு ஜூலி போட்ட முதல் பதிவு.

- Advertisement -

ஏ ஆர் ரஹ்மான் பகிர்ந்த புகைப்படம் ;

மேலும், தன்னிடம் வேண்டும் என்று ஹிந்தியில் கிண்டலாக பேசும் நபர்களிடம் பதிலுக்கு தமிழில் பேசி பதிலடி கொடுத்து இருக்கிறார். அதே போல் தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு எதிர்ப்புக்கு எதிராக அவ்வப்போது சோசியல் மீடியாவில் தன்னுடைய ஆதரவு கொடுத்து வந்திருக்கிறார். இப்படி ஒரு நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏ ஆர் ரஹ்மான் அதில் ழகரத்தை ஏந்தியிருக்கும் புரட்சிப் பெண்ணின் புகைப்படத்துக்கு கீழே பாரதிதாசனின் ‘இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு நேர்’ என்ற வரிகளை பதிவிட்டுள்ளார்.

அமித் ஷாவிற்கு பதிலடியா :

சமீபத்தில் தான் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆங்கில மொழிக்கு மாற்றாக இந்தி மொழியை பயன்படுத்த வேண்டும் என்றும், உள்துறை அமைச்சகத்தில் 70 விழுக்காடு அலுவல் பணிகள் ஹிந்தியில் மட்டுமே நடைபெறுவதாகவும் னைத்து மாநில மக்களும் உரையாடுவதற்கு பொதுமொழியாக ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்திய மொழி ஒன்று இருக்க வேண்டும் என்றும் கூறி இருந்தார். இதற்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.

-விளம்பரம்-

காயத்ரி ரகுராம் பதிலடி :

இப்படி ஒரு நிலையில் ஏ ஆர் ரஹ்மானின் இந்த பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து நடிகை காயத்ரி ரகுராம் சூசகமாக பதிவு ஒன்றை செய்து உள்ளார். அதில் தமிழ் பாடல்களில் இடம்பெற்ற இந்தி வரிகளை குறிப்பிட்டு இருக்கிறார். அதிலும், அவரின் அந்த பதவில் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்த, ஹம்ம ஹம்மா, முக்கால போன்ற பாடல்களும் இடம்பெற்று இருக்கிறது.

ஏ ஆர் பாடல்களில் இந்தி வரிகள் :

இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், திராவிடக் கட்சிகள், இசை அமைப்பாளர் மற்றும் பாடலாசிரியர் தமிழில் இதுபோன்ற வார்த்தைகளைச் சேர்த்ததுதான் அவர்களின் சாதனை. – முஸ்தபா முஸ்தபா don’t worry, வலுஹாபா வலுஹாபா Urvasi Urvasi, ஹே ஷபா ஹே ஷபா.. macho என்னா ஆச்சோ.. and more.. இதுதான் தமிழ் வளர்ச்சி? முக்காலா முகபுல்லா, தில் ரூபா தில் ரூபா, hello doctor heart weak ache.. என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement