என் அப்பா கேட்ட அந்த வார்த்தை .! நீண்ட நாட்களுக்கு பின் மனம் திறந்த லாஸ்லியா.!

0
2836
losliya
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. நேற்றைய நிகழ்ச்சியில் இருந்துதர்ஷன் வெளியேற்றப்பட்டதால் இந்த சீசனில் லாஸ்லியா, சாண்டி,முகென் ,ஷெரின் ஆகியோர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இன்னும்7 நாட்களில் இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் என்பது தெரிய வந்துவிடும்.

-விளம்பரம்-

நேற்றைய நிகழ்ச்சியில் தர்ஷன் வெளியேறி இருந்துதான் ரசிகர்களுக்கும் சக போட்டியாளர்களுக்கும் பெரும் அதிர்ச்சியாக அமைந்து இருந்தது. கடந்த வாரம் ஷெரின் தான் வெளியேறுவார் என்று பலரும் எதிர்பார்த்து வந்த நிலையில் தர்ஷன் வெளியேற்றப்பட்டது மிகப் பெரிய ஏமாற்றமாக கருதப்பட்டு வருகிறது. இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் விஜய் டிவியையும் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் லாஸ்லியா தனது தந்தை குறித்து பேசியுள்ளார். அதில், இந்த வீட்டிற்கு நான் வந்தபோது நான் யோசிச்ச ஒரு விஷயம் யாருடனும் ரொம்ப கனெக்ட் ஆகக்கூடாது, அழக்கூடாது என்ற திட்டத்துடன் தான் வந்தேன். நானும் அப்பாவும் மீட்பண்ணும்போது நான் ரொம்ப நொறுங்கிடுவேன்னு எனக்கு தெரியும்.

நான் அப்பாவை பார்த்த அந்த தருணம் வார்த்தைகளால் சொல்லவே முடியாது. அப்பா என்னை பார்த்தவுடன் ரொம்ப அன்போடு என்னை கட்டிப்பிடிப்பார் என்று நினைத்தேன். ஆனால் அவர் ‘இங்க என்ன செஞ்சுகிட்டு இருக்கேன்னு’ என்று கேட்ட அந்த வார்த்தை எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு என்று கூறியுள்ளார் லாஸ்லியா.

-விளம்பரம்-
Advertisement