நீ தா அரமிக்கர.! எதிர் பார்த்தபடி ஆரம்பித்த லாஸ்லியா சாக்க்ஷி சண்டை.!

0
7104
Losliya
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி 75 நாட்களை நெருங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக நிகழ்ச்சியில் வனிதாவை வைத்தே கண்டன்ட் கொடுத்த வந்ததால் தற்போது பிக் பாஸ் வீட்டில் சாக்க்ஷி, அபிராமி, மோகன் வைத்யாவை சிறப்பு விருந்தினர்களாக உள்ளே அனுப்பி கண்டன்ட் கொடுக்க ஏற்பாடு செய்துள்ளார் பிக் பாஸ்.

-விளம்பரம்-

சாக்க்ஷி உள்ளே நுழைந்ததால் கவின் கொஞ்சம் சாக்க்ஷியிடம் தள்ளி இருந்து வருகிறார். ஆனால், கவினை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வேண்டுமென்றே வம்புக்கு இழுத்து வருகிறார் சாக்க்ஷி. மேலும், நேற்றய நிகழ்ச்சியில் மக்களை நாய்கள் என்று சாக்க்ஷி குறிப்பிடத்தது மற்றொரு புறம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பாருங்க : மக்கள் என்ன நாயா? சாக்க்ஷியின் திமிர் பேச்சு.! வைரலாகும் நேற்றய எபிசோடின் வீடியோ.! 

- Advertisement -

இதனால் சாக்க்ஷியை உள்ளே அனுப்பியதற்கான பலனை அனுபவித்து விட்டோம் என்று நிம்மதியில் இருக்கிறார் பிக் பாஸ். இன்று வெளியான முதல் ப்ரோமோவில் அபிராமி, மோகன் வைத்யா, சாக்க்ஷி மூவரும் நடுவர்களாக இருந்து மற்ற போட்டியாளர்களுக்கு விருதினை அளித்தனர்.

அப்போது பச்சோந்தி என்ற விருதினை லாஸ்லியாவிற்கு அறிவித்தனர். ஆனால், அதனை லாஸ்லியா ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் நடுவர்களை மதிக்கவில்லை என்று சாக்க்ஷி கோபித்துக்கொண்டார். தற்போது இரண்டாவது ப்ரோமோவில் சாக்க்ஷி மற்றும் லாஸ்லியாவிற்கு சண்டை ஏற்பட்டுள்ளதை காண்பித்துள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement