விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பிரதீப் வெளியேற்றப்பட்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சீசன் துவங்கியதில் இருந்து பிரதீப்க்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவு இருந்து வந்தது. எனவே அவரை டார்கெட் செய்து பல விஷயங்களை செய்தனர். இதற்கு ஏதுவாக பிரதீப் பேசிய சில அநாகரிகமான வார்த்தைகளும், சில எல்லை மீறி செயல்களும் அவரது எந்த வெளியேற்றத்திற்கு காரணமாகிவிட்டது.
அதோடு ஒரு டாஸ்கின் போது கூல் சுரேஷ், பிரதீப் தாய் படிக்கும் சொல் ஒன்றே பேசி விட்டதாக சர்ச்சை வெடித்தது. இதனால் மற்ற போட்டியாளர்களும் பிரதீப் மீது கடும் அதிருப்தி அடைந்தனர். இதனால் கமல் சாரிடம் இதுகுறித்து முறையிட போவதாக தான் மாயா மற்றும் அவரது குழுவினர் முடிவெடுத்தார்கள். ஆனால், கூல் சுரேஷ் பிரச்சனைகள் இருந்து விலகி பிரதீப்பால் எங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று வேறு ஒரு புதிய பஞ்சாயத்தை கிளப்பி விட்டார்கள்.
பிரதீப் வெளியேற்றம்:
இதுனால் வரை பிரதீப் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் அப்படி என்ன நடந்து கொண்டார் என்பதை ஒரு மணி நேர நிகழ்ச்சியிலோ 24 மணி நேர நேர நிகழ்ச்சியிலோ காண்பிக்கப்படவில்லை. பிரதீப் என்னதான் மோசமாக பேசியிருந்தாலும் அவரை ஒரு உவமனைசராக முத்திரை குத்தி வெளியில் அனுப்பி இருப்பது அவரது எதிர்காலத்தை நிச்சயம் பாதிக்கும். இந்த விஷயத்தில் கமல் கூட யோசிக்காமல் செய்துவிட்டார் என்பதே பலரின் கருத்தாக இருந்து வருகிறது.
Maya :
— Christopher Kanagaraj (@Chrissuccess) November 14, 2023
Veliya pona “PRADEEP” Supporters ku enna solrathu? Kamal Sir vera itha thooki namma thalaila potutaru😐
pic.twitter.com/EV1xJVBQZN
நெட்டிசன்கள் விமர்சனம்:
பிரதீப் வெளியேற்றத்திற்கு மாயா&கோ தான் முக்கிய காரணம் என்றாலும் கமல் இந்த விஷயத்தை தீர விசாரிக்காமல் செயல்பட்டு விட்டார் என்பதே பலரின் வாதமாக இருந்து வருகிறது. பிரதீப்பிற்கு பலரின் ஆதரவு அவரை மீண்டும் பிக் பாஸில் கொண்டு வர வேண்டும் என்றும் கூறி வருகின்றனர். அதேபோல் பிக் பாஸ் வீட்டில் அர்ச்சனா, விசித்திரா இருவரும் ப்ரதிபிற்கு ஆதரவாக பேசி இருந்தார்கள். இதனால் பெரிய கலவரமே கடந்த வாரம் நடந்தது. பின் கமல் சில தினங்களுக்கு முன் மாயா &கோ டீமை வெளுத்து வாங்கி இருந்தார்.
மாயா-பூர்ணிமா பேசிய வீடியோ:
மேலும், வழக்கம்போல் போட்டியாளர்கள் தங்களுடைய வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்கள். இருந்தாலும் பிரதீப்பின் ரெட் கார்ட் குறித்த சர்ச்சை தான் இன்னும் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் மாயா- பூர்ணிமா இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது மாயா, இப்ப இது பேசலாமா என்று தெரியவில்லை. பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுத்தது பற்றி தான் அதிகமாக பேசிட்டு இருக்காங்க. வெளியில் போனால் நமக்கு பாதுகாப்பு இருக்குமா தெரியல? இதைப்பற்றி எப்படி எடுத்துப்பாங்கன்னு தெரியவில்லை.
Discussion abt meeting pradeep afte tthe show by maya and poornima .
— Dharshana (@Dharsh_2020) November 14, 2023
Clips with subtitles #biggbosstamil7 pic.twitter.com/qejE8VN8Rn
நெட்டிசன்கள் கேள்வி:
எல்லோரும் பிரதிப்பிற்கு தான் சப்போர்ட் செய்கிறார்கள் என்று சொன்னவுடன் பூர்ணிமா, ஆமாம். என்ன சொல்றதுன்னு தெரியல. வெளியே போனால் தான் தெரியும். பயமா இருக்கு, என்ன சொல்றதுன்னு தெரியவில்லை. அவன் என்ன நெனச்சிட்டு இருக்கான்னு தெரியல என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் இப்படி பேசி இருக்கும் வீடியோ வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள், இவர்கள் எந்த தவறும் செய்யவில்லை என்றால் ஏன் பயப்படனும்? எதற்காக அதைப் பற்றிய பேசணும் இந்த கேள்வி எழுப்பி வருகிறார்கள்.