சாண்டி செய்த விஷயத்திற்கு நன்றி தெரிவித்த முகென்.! எதற்காக தெரியுமா ?

0
1257
mugen
- Advertisement -

விஜய் டிவி கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. நேற்றுடன் 100 நாட்களை வெற்றிகரமாக நடந்துள்ள நிகழ்ச்சியில் கடந்த வாரம் தர்ஷன் வெளியேற்றப்பட்டதால் இந்த சீசனில் லாஸ்லியா, சாண்டி,முகென் ,ஷெரின் ஆகியோர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இன்னும் 7 நாட்களில் இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் என்பது தெரிய வந்துவிடும். இந்த சீசனில் தான் இறுதிப்போட்டிக்கு இரண்டு ஆண்களும் இரண்டு பெண்களும் தகுதியாகி உள்ளார்கள்.

-விளம்பரம்-

முதல் சீசனில் ஆண்(ஆரவ்) டைட்டில் வின்னர் ஆகியிருந்த நிலையில் இரண்டாவது சீசனில் பெண்(ரித்விகா) டைட்டில் வின்னர் ஆக வந்திருந்தார். எனவே, இந்த சீசனில் வெற்றி பெறப் போவது ஆணா இல்லை பெண்ணா என்ற மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அதே போல இந்த சீசனில் மலேசியாவை சேர்ந்த ஒருவர் இலங்கையை சேர்ந்த ஒருவர் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் கர்நாடகத்தை சேர்ந்த ஒருவர் என்று அணைத்து மக்களின் கவனத்தை ஈர்த்து விட்டார் பிக் பாஸ் . பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவடைய இருப்பதால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பல்வேறு போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று வந்த வண்ணம் இருந்தனர்.

இதையும் பாருங்க : வெளியேறும் ஒரு நாளைக்கு முன்பு தர்ஷனுக்கு நடந்த சதி.! தீயாய் பரவும் செய்தி.!

- Advertisement -

அந்த வகையில் நேற்றய நிகழ்ச்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய மீரா மிதுன், ரேஷ்மா, மோகன் வைத்யா, பாத்திமா பாபு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்தனர். அதே போல இன்றைய நிகழ்ச்சியில் சேரன் மற்றும் வனிதா பிக் பாஸ் வீட்டிற்கு செல்வதாக ஏற்கனவே ஒரு தகவல் வெளியாகியிருந்தது.

இன்றைய நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.இன்றைய நிகழ்ச்சியில் சூப்பர் சிங்கர் பிரபலம் பிரியங்கா மற்றும் இசை கலைஞர்கள் உள்ளே சென்றுள்ளனர். மேலும், தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில் முகென், இத்தனை நினைவுகளுக்கு காரணமாக இருந்த சாண்டிக்கும் பிக் பாஸிற்கும் நன்றி தெரிவித்துள்ளது.

-விளம்பரம்-

தற்போது பரபரப்பாக நடைபெற்று வரும் ஓட்டிங்கில் முகேனுக்கு தான் ஆதரவு அதிகம் இருந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், பல்வேறு இணையத்தளத்தில் நடைபெற்று வரும் ஓட்டிங்கில் கூட முகெனுக்கு தான் அதிக வாக்குகள் பதிவாகி வருகிறது. மேலும், அவரை தொடர்ந்து லாஸ்லியா, சாண்டியும் இறுதி இடத்தில் ஷெரினும் இருந்து வருகின்றனர். ஒருவேளை முகென் மற்றும் வெற்றி பெற்றுவிட்டால் அது பிக் பாஸ் நிகழ்ச்சியில் வரலாறாக அமையும்.

அது என்னவெனில் முகென் தான் இந்த சீசனில் டிக்கெட் டு பினாலேவை வென்று இறுதி போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றார். ஆனால், கடந்த முதல் சீசனில் சினேகன் மற்றும் இரண்டாவது சீசனில் ஜனனியும் டிக்கெட் டு பினாலேவை என்றாறனர். ஆனால், இவர்கள் இருவருமே பிக் பாஸ் பட்டத்தை வெல்லவில்லை. எனவே, இந்த சீசனில் இறுதி போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்ற முகெனாவது பட்டத்தை வெல்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement