எதுக்கு ஐ லவ் யூன்னு சொன்ன சொல்லுடி – படு பர்சனலாக சென்ற நிக்சன், கடைசியில் வெடித்த விஷ்ணு. முழு வீடியோ இதோ.

0
502
- Advertisement -

விஜய் டிவியில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 9வது வாரத்தை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். இதில் அனன்யா, பவா, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி,பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ. ஜோவிகா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.

-விளம்பரம்-

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிக் பாஸ் வீடு பள்ளிக்கூடமாக மாறிய நிலையில் நேற்று பிக் பாஸ் வீடு கல்லூரியாக மாறியது. இதில் போட்டியாளர்கள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களாக பிரிந்தனர். இந்த டாஸ்கில் அர்ச்சனா, மாயா மற்றும் பூர்ணிமாவை வச்சி செய்த நிலையில் நிக்சன், அர்ச்சனாவை வச்சி செய்தார். இறுதியில் இந்த டாஸ்கின் முடிவில் நிக்சன் மற்றும் ரவீனாவிற்கு Gold ஸ்டார் வழங்கப்பட்டது.

- Advertisement -

இந்த டாஸ்க் வின்னர் அர்ச்சனா மற்றும் நிக்ஸன் ஆகிய இருவருக்கும் சில வாக்குவாதம் ஏற்பட்டு இருந்தது. அப்போது நிக்சன் ‘ ஒருவரை துள்ரவன், பலியாடு என்றெல்லாம் முத்திரை குத்துவது நீங்கள் தான். நீங்கள் மற்றவர்களை மிகவும் கேவலமாக பேசிக்கொண்டு இருக்கிறீர்கள். முதல் வாரத்தில் அழுது இப்போ வரை அதை செய்கிறீர்கள் என்று நிக்சன் கூறியதும் கடுப்பான அர்ச்சனா ‘ நான் முதல் வாரத்தில் செய்ததை பற்றி எல்லாம் பேசுனா நான் நிறைய விஷயம் பேச வேண்டியது இருக்கும்’ என்று பதிலடி கொடுத்தார்.

இன்று வெளியான முதல் ப்ரோமோவில் கூட அர்ச்சனா மற்றும் நிக்சனுக்கு கடும் வாக்குவாதம் ஏற்ப்பட்டது. அப்போது அர்ச்சனாவை கறி துப்பி, வாடி போடி, நாயே என்றெல்லாம் பேசினார் நிக்சன். தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் மீண்டும் அர்ச்சனாவை திட்டி இருக்கிறார் நிக்சன். அதில் ‘ நான் கலாய்க்க ஆரம்பித்தால் 3 நாள் அலுவ, மூஞ்ச பாரு கருமம், சும்மா வினுஷா, வினுஷானு சொன்ன அவ்ளோ தான்.

-விளம்பரம்-

நான் யாரிடமும் பேசினால் உனக்கு என்னடி, நீ கேமரா முன்னாடி யாருக்கு போய் ஐ லவ் யூ சொன்ன, எதுக்கு சொன்ன சொல்லுடி என்று கேட்டதும் ‘அது என் பெர்சனல்’ என்று அர்ச்சனா சொன்னார். அதற்கு நிக்சன் ‘அதே போல தான் இது என் பெர்சனல், நான் யார்கிட்ட பேசுனா உனக்கு என்ன நீ ஏன் ஐ லவ் யூ சொன்ன சொல்லு’ என்று மீண்டும் மீண்டும் அர்ச்சனாவை தரக்குறைவாக பேசி இருந்தார். இந்த இருவரின் சண்டையில் போது நிக்சனை யாரும் பெரிதாக கேள்வி கேட்கவில்லை. மாறாக அர்ச்சனாவை தான் அனைவரும் அமைதியாக இருக்கச் சொன்னார்கள்.

அதிலும் குறிப்பாக விசித்ரா ‘அவனை ஏன் நீ provoke செய்கிறாய்’ என்று அர்ச்சனாவிடம் கூறினார். அதேபோல வினுஷா விஷயத்தை விஷ்ணு தான் ஆரம்பித்தார் என்றும் நாரதர் வேலை பார்த்தார். இதனால் நிக்சன் ‘இனி வினுஷாவ பற்றி யாராவது பேசினால் சொருகிடுவேன் என்று கத்தினார். இதனால் கடுப்பான விஷ்ணு எங்கே சொருகு பார்க்கலாம் என்று நிக்ஸனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனால் ‘நான் உங்களை சொல்லவில்லை என்று அப்படியே அடங்கிப் போனார் நிக்சன். பின்னர் தினேஷும், நிக்சனை அமைதியாக இருக்க சொல்ல, உடனே நிக்சன் ‘என்ன எல்லாரும் குரூப் சேர்ந்து வாரீங்களா என்று புலம்பினார்.

Advertisement