தாமரை தள்ளி விட்டதை மட்டும் சொல்றீங்க – பிரியங்கா என்னவெல்லாம் செய்துள்ளார் பாருங்க. நெட்டிசன்கள் பதிவு.

0
483
priyanka
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி 87 நாட்களை கடந்து மிகவும் பரபரப்பாக என்று கொண்டு இருக்கிறது. இதுவரை 12 பேர் வெளியேறி இருக்கும் நிலையில் பிரியங்கா, தாமரை செல்வி, ராஜு, பாவனி, சஞ்சீவ், சிபி, அமீர், நிரூப் என்று 8 பேர் மட்டும் இருக்கின்றனர். பிக் பாஸ் வீட்டில் தற்போது சவுண்டு பார்ட்டி என்றால் அது நிச்சயம் தாமரை செல்வியாக தான் இருக்கும். இதுவரை தாமாரை செல்வி பிக் பாஸ் வீட்டில் சண்டை இழுக்காதா ஆளே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் கடந்த சில வாரமாகவே பிரியங்கா மற்றும் தாமரை செல்விக்கு தான் பிரச்சனை சென்றது.

-விளம்பரம்-

இந்த சீசன் நிறைவடைய இன்னும் ஒரு சில வாரங்களே இருக்கும் நிலையில் இறுதி போட்டிக்கு நேரடியாக தகுதி பெற டிக்கெட் டு பின்னாலே டாஸ்க் கொடுக்கப்பட்டு இருக்கிறது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் துவங்கிய இந்த டாஸ்கில் நிரூப்பை பேசி வெளியே அனுப்பி வைத்துவிட்டனர். அதிலும் பிரியங்கா தான் நிரூப் பெயரை முதலில் சொன்னார்.

- Advertisement -

தாமரையை சீண்டிய பிரியங்கா :

இதை தொடர்ந்து 7 பேர் இந்த டாஸ்கை தொடர்ந்து வந்தனர். அந்த வகையில் நேற்றய நிகழ்ச்சியில் பாவனி மற்றும் தாமரை செல்வி வெளியேற்றப்பட்டார். அதிலும் நேற்றய நிகழ்ச்சியில் பிரியங்கா மற்றும் தாமரை இருவருக்கும் நடுவே மிகப்பெரிய சண்டையே வெடித்தது. இந்த டாஸ்க் ஆரம்பித்த முதலே தாமரையை தொடர்ந்து சீண்டிவிட்டு கொண்டே இருந்தார் பிரியங்கா.

பிரியங்காவை தள்ளிவிட்ட தாமரை :

அதிலும் தாமரையை ‘த்து’ என்று பிரியங்கா சொல்ல தாமரை செல்வியும் பதிலுக்கு பிரியங்காவை கண்ட மேனிக்கு திட்டினார். ஒரு கட்டத்தில் தாமரை, பிரியங்காவின் முட்டையை உடைக்க சென்ற போது பிரியங்கா, தாமரையை நீக்கி தள்ளி கொண்டே இருந்தார். இதனால் கடுப்பான தாமரை, பிரியங்காவை மிகவும் வேகமாக தள்ளிவிட்டார்.

-விளம்பரம்-

ஒரு முறை செய்ததற்கு 10 முறை செய்த பிரியங்கா ;

தாமரையின் இந்த தாக்குதலை சற்றும் எதிர் பாராத பிரியங்கா, பிக் பாஸிடம் இதை முறையிட்டார். அதே போல தாமரை ஒரு முறை தன்னை ஓங்கி தள்ளியதற்கு தாமரையை ‘இப்போ நீ என்ன பண்ண, என்ன பண்ண’ என்று பல முறை தள்ளிவிட்டார் தாமரை. இந்த விவகாரத்தில் தாமரைக்கு ஆதரவாக சிலரும் பிரியங்காவிற்கு ஆதரவாக சிலரும் பதிவிட்டு வருகின்றனர்.

‘அமீர் கூட மோத உனக்கு துப்பு இல்ல, த்து’ :

ஆனால், உண்மையில் தாமரை செல்வியை முதலில் சீண்டி விட்டு அவரின் பொறுமையை சோதித்தது பிரியங்கா தான். அதிலும் நிரூபுடன் தன்னால் பிஸிக்கல் டாஸ்க் செய்ய முடியாது என்று சொன்ன பிரியங்கா, தாமரையிடம் ‘அமீர் கூட மோத உனக்கு துப்பு இல்ல, த்து’ என்று சொன்னார் என்பது குறிப்பிடத்தக்கது.

எட்டி உதைத்தாரா பிரியங்கா :

இருப்பினும் பிரியங்கா, ‘த்து’ என்று சொன்னது தவறு தான். ஆனால், தாமரை செல்வி, பிரியங்காவை பிசிக்கலாக தாக்கியது தவறு என்று பிரியங்காவின் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். ஆனால், இந்த குறும்படத்தில் தாமரை செல்வியிடம் சண்டை போடும் போது பிரியங்கா தன் காலால் எட்டி உதைத்து இருக்கிறார் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

Advertisement