விஜய் டிவியை விட்டு விலக முடிவெடுத்த பிரியங்கா ? – அவரே சொன்ன விஷயம். பாலா சொன்ன அட்வைஸ்.

0
632
priyanka
- Advertisement -

விஜய் டிவியை விட்டு விலக இருப்பதாக பிரியங்கா எடுத்திருக்கும் முடிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பல பெண் தொகுப்பாளர்கள் வந்து சென்றாலும் எப்போதும் மக்களுக்கு பேவரட் என்று ஒரு சிலர் தான் இருப்பார்கள். அதில் தற்போது விஜய் டிவியில் மக்களின் ஃபேவரட் தொகுப்பாளராக இருப்பவர் பிரியங்கா. சொல்லப்போனால் டிடிக்கு பிறகு ரசிகர்கள் கூட்டம் அதிகம் இருப்பது பிரியங்காவுக்கு தான். மேலும், இவர் வாயாடி தொகுப்பாளினி என்று பெயர் எடுத்தவர். இவருடைய பேச்சும், சுட்டி தனமும் ரசிகர்களை சீக்கிரமாகவே கவர்ந்தது.

-விளம்பரம்-

இதனாலேயே இவர் குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். அதிலும் விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பல வருடங்களாக பிரியங்கா தான் தொகுத்து வழங்கி இருக்கிறார். இதனிடையே பிரியங்கா கடந்த 2016 ஆம் ஆண்டு பிரவீன் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பிரவீன் குமாரும் விஜய் டிவியின் தயாரிப்பு குழுவில் பணியாற்றி இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பிரியங்கா திருமணத்திற்க்கு பிறகு தனது தொகுப்பாளர் பணியை தொடர்ந்து செய்து வருகிறார்.

இதையும் பாருங்க : தேவர் மகன் படத்திற்கு பின் 39 ஆண்டுகள் கழித்து ரேவதிக்கு கிடைத்த உயரிய விருது.

- Advertisement -

பிரியங்கா பற்றிய தகவல்:

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி, சூப்பர் சிங்கர், கலக்கப்போவது யாரு, ஸ்டார்ட் மியூசிக் போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுப்பாளினியாகியாக தொகுத்து வழங்கி இருக்கிறார். அதோடு கலக்கபோவது யாரு என்ற நிகழ்ச்சியில் இவர் நடுவராகவும் பங்கு பெற்று இருக்கிறார். சமீபத்தில் முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 5ல் கலந்து கொள்ள ப்ரியங்காவிற்கு வாய்ப்பு கிடைத்தது. அதோடு இந்த நிகழ்ச்சியில் முகம் தெரிந்த நபர் என்றால் சிலர் தான். அதில் தொகுப்பாளினி பிரியங்காவும் ஒருவர். மேலும், இந்த நிகழ்ச்சியில் பிரியங்கா மிகத் திறமையாக விளையாடி இருந்தார். பல பிரச்சனைகளில் பிரியங்கா சிக்கி இருந்தாலும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தார்.

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி:

அதுமட்டும் இல்லாமல் பல முறை எவிக்சனில் பிரியங்கா வந்து இருந்தாலும் மக்கள் அவரை காப்பாற்றினார்கள். பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பிரியங்கா டைட்டில் வின்னர் ஆகவில்லை என்றாலும் நிகழ்ச்சியில் ரன்னர் அதாவது இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பிரியங்கா வழக்கம் போல் தன்னுடைய தொகுப்பாளினி வேலையை தொடங்கி விட்டார். அதுமட்டும் இல்லாமல் இவர் தனியாக யூடியூப் சேனல் ஒன்று இவர் வருகிறார். அதில் அவர் செய்யும் காமெடி குறும்பு வீடியோக்களை பதிவேற்றி வருகிறார்கள். இதனால் இவரை லட்சக்கணக்கான நபர்கள் பாலோ செகிறார்கள்.

-விளம்பரம்-

பிபி ஜோடிகள் நிகழ்ச்சி:

தற்போது பிரியங்கா விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிபி 2 ஜோடிகள் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் பிரியங்கா விஜய் டிவியை விட்டு விலக முடிவு எடுத்ததாக முடிவெடுத்து இருக்கிறார் என்ற அதிர்ச்சி தகவல் சோசியல் மீடியாவில் வெளியாகி இருக்கிறது. அது என்னவென்றால், கடந்த மாதம் பிரியங்கா தன்னுடைய பிறந்தநாளை வீட்டில் கொண்டாடி இருக்கிறார். இவருடைய பிறந்த நாளிற்கு பிக் பாஸ் நண்பர்கள், விஜய் டிவி பிரபலங்கள் என பலரும் சேர்ந்து பிரியங்காவிற்கு பிறந்தநாள் கிப்ட் கொடுத்திருக்கின்றனர். மேலும், கேக் வெட்டி பிறந்தநாளை மிக சிறப்பாக பிரியங்கா கொண்டிருந்தார். அந்த வீடியோவை அவர் ஒரு மாதம் கழித்து தற்போது தான் வெளியிட்டிருக்கிறார்.

விஜய் டீவியை விட்டு பிரியங்கா விலக காரணம்:

அந்த வீடியோவில் காமெடியன் பாலா உடன் பேசி இருக்கும் ஒரு பகுதி மட்டும் தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் அவர் தனது 30 வயது ஆகிவிட்டது. வயதானவர் போன்ற பிலிங் வருகிறது. அதனால் நான் இதோடு தொலைக்காட்சியை விட்டு விட்டு ஒரே பிரேக் எடுக்கலாம் என இருக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார். அதற்கு பாலா, மைக்கை பிடித்தவர்கள் எல்லாம் ஆங்கரிங் ஆகி விட முடியாது. மைக்கிற்கே பிடித்தவங்க தான் ஆங்கர். நீயே நினைத்தாலும் அது உன்னை விடாது என்று கூறி பிரியங்காவின் முடிவை மாற்ற சொல்லி இருக்கிறார். இவர் கூறியிருக்கும் அதிர்ச்சித் தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது.

Advertisement