அவன உனக்கு இப்போதான்டி தெரியும்,எனக்கு அவன 6 வருஷமா தெரியும் – மணி விஷயத்தில் ரவீனா மீது கடுப்பான ஐசு.

0
1820
Raveena
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே எல்லா சீசன்களிலும் ஒரு காதல் ஜோடி இருப்பது வழக்கமான ஒன்றுதான். அந்த வகையில் இந்த சீசனில் மணிச்சந்திரா- ரவீனா இருவரும் காதல் ஜோடிகளாக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பே இவர்கள் இருவருக்கும் நல்ல அறிமுகம் இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இவர்கள் இருவரும் சேர்ந்து நிறைய ரில்ஸ் வீடியோக்கள், நடனமெல்லாம் செய்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருவரும் சேர்ந்து பங்கேற்று இருக்கிறார்கள். முதல் நாளே இவர்கள் இருவரும் வேக்கப் பாடலில் பயங்கரமாக ஆட்டம் போட்டு திடீரென்று ரவீனா மணி இடுப்பில் உட்காந்ததெல்லாம் பார்வையாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. அடிக்கடி ரவீனா- மணி இருவரும் தனியாக சந்தித்து பேசி கொள்கிறார்கள். குறிப்பாக, இருவரும் ரகசியம் பேசுகிறோம் என்று பிக் பாஸ் விதியை மீறி கையில் எழுதி பேசிருந்தார்கள்.

- Advertisement -

இதை கமலும் கண்டித்திருந்தார். இப்படி இவர்கள் இருவரும் பேசுவது குறித்து வெளியில் மட்டும் இல்லாமல் பிக் பாஸ் வீட்டிலேயே சர்ச்சை கிளம்பி இருக்கிறது.இந்த நிலையில் ரவீனா- மணி இருவரும் நெருக்கமாக பழவதை பார்த்து விசித்திரா, நீங்கள் ரெண்டு பேரும் லவ்வரா? என்று ஓபனாக கேட்டிருக்கிறார். உடனே ரவீனா, இல்லை நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்று சொல்லி இருக்கிறார். அதற்கு விசித்திரா, நீங்கள் பழகுவதை பார்த்தால் அப்படியெல்லாம் தெரியவில்லை.

காதலர்கள் போல் இருக்கிறீர்கள். அதில் ஒன்றும் தப்பில்லை என்று சொல்லி இருக்கிறார். உடனே ரவீனா, நாங்கள் இருவரும் நண்பர்கள் தான்.கொஞ்சம் நெருக்கமான நண்பர்கள் என்று மழுப்பி பேசி இருக்கிறார். உடனே மணி நீங்க சொல்லியே வந்துடும் போலவே என்று கூறி இருக்கிறார். அதே போல விஷ்ணு, பூர்ணிமா, மாயா ஆகியோர் பேசிக்கொண்டு இருக்கும் போது விஷ்ணு ‘அவர்கள் இருவரும் வெளியில் இருக்கும் போதே காதலர்கள் தான் என்று சொன்னார்கள்.

-விளம்பரம்-

ஆனால், கேட்டால் நண்பர்கள் என்று சொல்கிறார்கள் என்று மாயாவிடம் கூறி இருந்தார். இப்படி பிக் பாஸ் போட்டியாளர்கள் மத்தியில் மணி – ரவீனா குறித்து தான் கிசு கிசு ஓடிக்கொண்டு இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் நேற்றய நிகழ்ச்சியில் மணி மற்றும் ரவீனாவிடம் ஐசு, நீங்கள் இருவரும் காதலிக்கிறீர்கள் என்று இங்கே எல்லாரும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அது உண்மையா என்று கேட்டார்.

அப்போது ரவீனா மற்றும் மணி இருவரும் நாங்களே அதை இன்னும் முடிவு செய்யவில்லை என்று சொன்னார்கள். மேலும், ரவீனா ‘அப்படியே இருந்தாலும் நாங்க ஏன் உங்ககிட்ட சொல்லணும் என்று சொன்னதும் உடனே ஐசு, உன் மீது கூட எனக்கு கோபம் தான் உனக்கு மணியை இப்போது தான் தெரியும். ஆனால், மணியை எனக்கு 6 வருடங்களாக தெரியும் அந்த அக்கறையில் தான் நான் கேட்கிறேன் என்றார். பின்னர் மாயாவிடம் இதுகுறித்து புலம்பி இருக்கிறார்.

Advertisement