ITC ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்கள் ஒன்றாக எடுத்த புகைப்படம் இதோ.

0
99519
Bb5
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் நிகழ்ச்சி என்று சொல்லலாம். கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இருந்தும் காரசாரம் குறையாமல் இந்த நிகழ்ச்சி சென்று கொண்டு இருக்கிறது. தமிழில் ஒளிபரப்பாவது போல இந்த நிகழ்ச்சி ஹிந்தி, மலையாளம், தெலுங்கு என்று பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது.

-விளம்பரம்-

மேலும், தமிழில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி அக்டோபர் 3 ஆம் தேதி ஒளிப்பரப்பாகவுள்ளது. மேலும், பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்க போகிறது என்று சொன்னதில் இருந்தே சோஷியல் மீடியாவில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறித்து தான் பல கருத்துக்கள் போய்க் கொண்டிருக்கின்றது. அதோடு இந்த முறை பிக் பாஸ் சீசனில் யாரெல்லாம் கலந்து கொள்ளப் போகிறார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள்.

இதையும் பாருங்க : பார்வதி, மூன்றாம் உலகிற்கு சொல்கிறாரா ? இல்லையா ? வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ.

- Advertisement -

இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 5 கலந்துகொள்ள இருக்கும் நட்சத்திரங்களின் புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தில் சகிலாவின் மகள் மிலா, கோபிநாத் ரவி, ஷாலு ஷாமி, கண்மணி உள்ளிட்ட பல பிரபலங்கள் உள்ளனர். தற்போது இவர்கள் எல்லாம் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இது அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் என்று சொல்லப்படுகிறது. தற்போது இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. இன்னும் சில நாட்களில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்க இருப்பதால் ரசிகர்கள் ஆரவாரத்துடன் எதிர்நோக்கி காத்து கொண்டிருக்கின்றனர்

-விளம்பரம்-
Advertisement