பிக் பாஸில் இருந்து இந்த வாரம் வெளியேறிய நபர் யார் தெரியுமா ? (சீக்ரட் ரூம் இருக்கா?)

0
633
biggboss
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கடந்த மாதம் தான் கோலாகலமாக தொடங்கப்பட்டது. இந்த சீசனில் தெரிந்த முகங்களை விட தெரியாத முகங்கள் தான் அதிகம் இருக்கிறார்கள். அதிலும் ஆண் போட்டியாளர்களை விட பெண்கள் தான் அதிகம் உள்ளனர். மேலும், நிகழ்ச்சியில் போட்டிகளும், சவால்களும் நாளுக்கு நாள் வலுப்பெற்றுக் கொண்டே செல்கிறது. இதனால் போட்டியாளர்களுக்குள் கலவரம் தொடங்கி இருக்கிறது.

-விளம்பரம்-

அதுமட்டுமில்லாமல் வார வாரம் எலிமினேஷனில் போட்டியாளர்கள் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். முதலில் நதியா சாங் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினார். அவரைத் தொடர்ந்து அபிஷேக் ராஜா, சின்ன பொண்ணு, ஸ்ருதி, மதுமிதா, இசை வாணி ஆகியோர் வெளியேறுகிறார்கள். அதே போல கடந்த வாரம் ஐக்கி பெரி வெளியேறி இருந்தார்.

இதையும் பாருங்க : குதிரையுடன் போட்டோ ஷூட் நடத்திய சீரியல் நடிகை – பீதி கிளப்பிய குதிரை. வைரல் வீடியோ.

- Advertisement -

இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் ராஜீவ், அபினை, அக்ஷரா, வருண், சிபி, பிரியங்கா அண்ணாச்சி, அபிஷேக், தாமரைச்செல்வி, பாவணி ஆகிய 10 பேர் நாமினேட் ஆகி இருந்தனர். இவர்களில் யார் வெளியேறுவார்கள் என்று மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் இந்த வாரம் அபிஷேக் வெளியேறி இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

ஏற்கனவே அபிஷேக்கை இரண்டாம் வாரத்திலேயே மக்கள் வாக்கை போட்டு வெளியேற்றி விட்டார்கள். இருப்பினும் பிக்பாஸில் இவர் இல்லாமல் கொஞ்சம் சுவாரசியம் குறைவாக இருந்ததால் இவரை மீண்டும் கொண்டு வந்தார்கள். ஆனாலும், இவரது செயல்பாடுகள் மக்களுக்கு பிடிக்கவில்லை என்பதால் இவரை மீண்டும் ஒருமுறை பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

-விளம்பரம்-
Advertisement