ஜோவிகாவை வச்சி செய்ய போறேன், தோழி பூர்ணிமாவுடன் திட்டம் தீட்டும் மாயா

0
1460
- Advertisement -

கடந்த சில தினங்களாகவே சோசியல் மீடியா முழுவதும் ஹாட் டாபிக்கே பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி குறித்து தான். அனைவரும் எதிர்பார்த்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கோலாகலமாக கடந்த ஞாயிற்று கிழமை தொடங்கி ஒரு வாரத்தை கடந்து இருக்கிறது. மற்ற சீசன்களை போல இந்த சீனிலும் ரசிகர்களுக்கு பரிட்சியமான மற்றும் பரிட்சியமில்லாத போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

-விளம்பரம்-

இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு விஜய், ஜோவிகா விஜயகுமார், அக்ஷயா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றனர். மேலும், இந்த சீசனில் வித்தியாசமாக இரண்டு வீடுகளுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.

- Advertisement -

முதல் வாரத்திற்கான நாமினேஷன் பட்டியில் அனன்யா, ஐசு, பவா செல்லதுரை, ரவீனா, ஜோவிகா, பிரதீப் ஆண்டனி, யோகேந்திரன் ஆகியோர் பெயர்கள் இடம் பெற்று இருந்தது. அதோடு முதல் வாரம் எவிக்சன் நடக்காது என்று பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், முதல் வாரத்திலேயே அனன்யா வெளியேறி இருந்தார். இரண்டாம் வாரத்திற்கான கேப்டனாக சரவணா விக்ரம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து ஐசு, விஷ்ணு, விஜய்,பவா செல்லதுரை, மாயா கிருஷ்ணன்,பிரதீப்,கூல் சுரேஷ் ஆகியோரை ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பினார் சரவணன். ஆனால், பவா செல்லதுரை என்னால் மீண்டும் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு போக விருப்பமில்லை, நான் நிகழ்ச்சியில் தொடரவும் விருப்பமில்லை என்று பிக் பாஸிடம் கூறி இருந்தார். பின் பவா தன்னால் இனி நிகழ்ச்சியில் விளையாட முடியாது என்று தாமாகவே வெளியேறிவிட்டார்.

-விளம்பரம்-

தற்போது மொத்தம் 16 பேர் பிக் பாஸ் வீட்டில் இருக்கிறார்கள். அதே போல மாயாவும் நான் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு செல்லமாட்டேன். அங்கே எனக்கு பாதுகாப்பு இல்லை. அதிலும் பிரதீப் என்னை எதாவது செய்துவிடுவார் என்று பயமாக இருக்கிறது என்றும் கூறி இருந்தார். இதனை தொடர்ந்து அவரை சமாதானம் செய்து ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் இரண்டாம் வாரத்திற்கான நாமினேசன் நடைபெற்று இருந்தது.

அந்த வகையில் அக்ஷயா, விசித்ரா, ஜோவிகா, பூர்ணிமா ஆகியோர் பெரிய பிக் பாஸ் வீட்டிலிருந்து நாமினேட் ஆகியிருக்கிறார்கள். மேலும், பிக் பாஸ் வீட்டில் யார் ஸ்வரைசமாக விளையாடுகிறார்கள் என்ற விவாதம் சென்று கொண்டு இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் இன்று வெளியாகி இருக்கும் மூன்றாம் ப்ரோமோவில் டாஸ்க்கில் ஜோவிகாவை வச்சி செய்யப்போவதாக மாயா, பூர்ணிமாவிடம் கூறியுள்ளார்.

Advertisement