நீ லவ் லெட்டர் எழுதுவியா.! ஷெரீனை மீண்டும் டார்கெட் செய்யும் வனிதா.!

0
2205
Vanitha-sherin
- Advertisement -

கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. நேற்றுடன் 100 நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ள இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் தர்ஷன் வெளியேற்றப்பட்டதால் இந்த சீசனில் லாஸ்லியா, சாண்டி,முகென் ,ஷெரின் ஆகியோர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இன்னும் 7 நாட்களில் இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் என்பது தெரிய வந்துவிடும். இந்த சீசனில் தான் இறுதிப்போட்டிக்கு இரண்டு ஆண்களும் இரண்டு பெண்களும் தகுதியாகி உள்ளார்கள்.

-விளம்பரம்-

முதல் சீசனில் ஆண்(ஆரவ்) டைட்டில் வின்னர் ஆகியிருந்த நிலையில் இரண்டாவது சீசனில் பெண்(ரித்விகா) டைட்டில் வின்னர் ஆக வந்திருந்தார். எனவே, இந்த சீசனில் வெற்றி பெறப் போவது ஆணா இல்லை பெண்ணா என்ற மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அதே போல இந்த சீசனில் மலேசியாவை சேர்ந்த ஒருவர் இலங்கையை சேர்ந்த ஒருவர் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் கர்நாடகத்தை சேர்ந்த ஒருவர் என்று அணைத்து மக்களின் கவனத்தை ஈர்த்து விட்டார் பிக் பாஸ் . பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவடைய இருப்பதால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பல்வேறு போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று வந்த வண்ணம் இருந்தனர் .

இதையும் பாருங்க : படையப்பா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக முதலில் இவர் தான் நடித்தாராம்.! படப்பிடிப்பில் எடுக்கபட்ட புகைப்படம் .!

- Advertisement -

அந்த வகையில் நேற்றய நிகழ்ச்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய மீரா மிதுன், ரேஷ்மா, மோகன் வைத்யா, பாத்திமா பாபு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்தனர். அதே போல இன்றைய நிகழ்ச்சியில் சேரன் மற்றும் வனிதா பிக் பாஸ் வீட்டிற்கு செல்வதாக ஏற்கனவே ஒரு தகவல் வெளியாகியிருந்தது. ஆனால், எதிர்பாராத விதமாக சாக்க்ஷி மற்றும் கஸ்தூரி கூட பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார்.

இன்று வெளியான முதல் ப்ரோமோவில், உள்ளே சென்றவுடன் வனிதா, ஷெரினிடம் தர்ஷன் வெளியேறியதற்கு நீ தான் காரணம் என்று கூறி ஷெரீனை அழ வைத்துள்ளார் . மேலும், உன்னை பற்றையும் தர்ஷனை பற்றியும் நான் சொன்ன விஷயத்தை மக்கள் முதலில் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், பின்னர் ஏற்று கொண்டு விட்டனர் என்று கூறியுள்ளார். இதனால் கடுப்பான சாக்க்ஷி, வணிதாவிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

-விளம்பரம்-

கடந்த சில முன்னர் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்திருந்த வனிதா, ஷெரின் தான் தர்ஷன் வெளியேற்றத்திற்கு காரணம் என்றும், அவர் தான் தர்ஷனை வலையில் விழ வைத்தார் என்றும் கூறி இருந்தார்.தற்போது ஷெரின் ஜெயிக்க கூடாது என்பதற்காகவே ஷெரீனை வேண்டுமென்றே டார்கெட் செய்துள்ளார் வனிதா. தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில், வனிதாவால் ஷெரின் கதறி அழுகிறார். இதனால் கஸ்தூரி ஷெரீனை சமாதானம் செய்கிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement