வனிதாவை தொடர்ந்து சீண்டிய கஸ்தூரி.! கடுப்பில் வனிதா செய்த செயல்.! என்ன இப்படி பண்ணிட்டார்.!

0
1351
vanitha-kasthuri
- Advertisement -

பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் சண்டைகளும் சர்ச்சைகளும் இருப்பது வாடிக்கையான ஒரு விஷயம்தான். பொதுவாக பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போதுதான் போட்டியாளர்கள் மத்தியில் வாக்குவாதங்கள் ஏற்படும் என்றால் தற்போது சீசன் 3 கலந்துகொண்ட கஸ்தூரி மற்றும் வனிதா இருவரும் அதற்கு விதிவிலக்காக இருந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னரும் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

-விளம்பரம்-

கஸ்தூரி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து போது வனிதாவை வாத்து வனிதா என்று குறிப்பிட்டு விட்டார் என்று வணிதாவிற்கும் இவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டு இருந்தது. ஆனால், அதன் பின்னர் இருவரும் இதை பற்றி பேசி சமாதானம் ஆகினர். சமீபத்தில் பிக் பாஸ் வீட்டில் இருந்து கவின் வெளியேறியதை குறித்து வனிதா ட்விட்டரில் ட்வீட் செய்திருந்தார்.மேலும், இந்த வாரம் தனது ஆதரவு லாஸ்லியாவிற்கு என்றும் பதிவிட்டிருந்தார் வனிதா. அதே போல சனம் ஷெட்டி, தர்ஷனால் பாதிக்கப்பட்டு மருத்துவரிடம் சென்றதாக கூறியிருந்தார். ஆனால் , அது பொய்யான தகவல் என்று சனம் கூறியிருந்தார்.

இதையும் பாருங்க : ஷாக்கிங் : காப்பாற்றபட்ட ஷெரின்.! யாரும் எதிர் பாராத விதமாக இந்த வாரம் வெளியேறிய நபர்.!

- Advertisement -

இதனால் வனிதா, இனி பிக் பாஸ் பற்றி எந்த கேள்விக்கும் பதில் சொல்ல மாட்டேன் என்று பதிவிட்டார். ஆனால், வனிதாவை தொடர்ந்து தாக்கி ட்வீட் செய்து வருகிறார் கஸ்தூரி. அந்த வகையில் சமீபத்தில் வனிதாவை மீண்டும் சீண்டிய கஸ்தூரி, பொழுதுபோக்கை பற்றி உங்கள் கருத்து வக்கிரமாக இருக்கிறது. உங்கள் படத்தையாவது ஒழுங்காக எடுங்கள் என்று ட்வீட் செய்து இருந்தார்.

இதனால் கடுப்பான வனிதா, கொஞ்சம் நிறுத்து, உனக்கு உள்ளேயும் ஒன்றும் இல்லை வெளியேவும் ஒன்றும் இல்லை. என்னுடைய நல்லதற்காக உன்னை நான் பிளாக் செய்கிறேன் என்று கஸ்தூரியை பிளாக் செய்து தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார் வனிதா.

-விளம்பரம்-
Advertisement