விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மிகவும் கோலாகலமாக நிறைவடைந்தது. 17 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் முகென் முதலிடத்தையும் சாண்டி இரண்டாவது இடத்தையும் பெற்றிருந்தார்கள். இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான சில போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள். அந்த வகையில் பிரபல நடிகையான வனிதாவும் ஒருவர். இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வனிதா.
இதையும் பாருங்க : ‘வீட்டு வேலை பார்த்து எவ்வளோ நாள் ஆச்சு’ மாடு மேய்க்கும் விஜய் டிவி பிரபலம். வீடியோ இதோ
இது மட்டுமில்லாமல் தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகளான விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மூத்த மகள் தான் வனிதா என்பதும் குறிப்பிடத்தக்கது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பதாகவே வனிதாவுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் ஏற்பட்ட பிரச்சனை ஊடகங்களில் மிகவும் வைரலாக பரவி வந்தது. மேலும், விஜயகுமாருக்கு சொந்தமான வீட்டில் தங்கி வனிதாவை வனிதாவை போலீசார் காலி செய்ய முயன்றார்கள். அப்போது நடுரோட்டில் நின்று கொண்டு போலீசார்கள் இடமே வனிதா நைட்டியை மடித்துக் கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.
இதையும் பாருங்க : தனது தாயுடன் தனியாக வாழ்ந்து வரும் நடிகை சீதாவின் தற்போதைய நிலை.
இதனால் வனிதா என்றாலே மிகவும் சர்ச்சையான பேர்வழிதான் என்ற ஒரு தோற்றம் வனிதாவிற்கு உருவானது. இப்படிப்பட்ட ஒரு நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் வனிதா. பிக் பாஸில் கலந்து கொண்ட முதல் நாளிலிருந்தே மற்ற போட்டியாளர்களை வச்சி செய்து வந்தார் வனிதா. சொல்லபோன்னால் தான் வனிதாவால் தான் trp எகிறியது. இதனால் வனிதாவை தக்க வைத்துக்கொண்ட விஜய் டிவி வனிதாவை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள வைத்தார்கள்.
மேலும், இந்த நிகழ்ச்சியிலும் வனிதா ஆதிக்கத்தை செலுத்தி முதல் இடத்தை பிடித்தார். இந்த நிகழ்ச்சியில் வனிதா செஞ்ச ரெசிபிக்களை வேற லெவல். இந்த நிலையில் வனிதா புதிய சேனல் ஒன்றை ஆரபித்துள்ளார். இந்த நிலையில் இந்த சேனலின் முதல் வீடீயோவை வெளியிட்டுள்ளார் வனிதா. அதில், கொரோனா வைரஸை எதிர்க்கும் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் மூலிகை சமையல் ஒன்றை செய்திருந்தனர்.
மேலும், இந்த வீடீயோவில் சூப்பர் சிங்கர் மற்றும் குக்கு வித் கோமாளி புகழ் சிவாங்கியும் நடித்துள்ளார். இந்த நிலையில் வனிதா தனது சமூக வலைதள பக்கத்தில் ஷூட்டிங்கின் போது எடுத்த சில புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். இதனை கண்ட தம்பிகள், ஊரடங்கின் போது இப்படி கும்பல் சேர்ந்து எப்படி ஷூட்டிங் செய்தீர்கள் என்று கேள்வி கேட்டு வருகின்றனர்.