பிரதீப் ஆண்டனியின் பெற்றோர் இறப்பை கேலி செய்த் விஜய் வர்மா – நெட்டிசன்கள் கடும் கண்டனம்.

0
872
Pradeep
- Advertisement -

விஜய் வர்மா- பிரதீப் ஆண்டனி குறித்த சர்ச்சை தான் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர வைரலாகி வருகிறது. பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கோலாகலமாக மூன்று நாட்கள் கடந்து இன்று 4ம் நாள் தொடங்கி இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு விஜய், ஜோவிகா விஜயகுமார், அனன்யா ராவ், ஐஷு, அக்ஷயா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றனர்.

-விளம்பரம்-

இந்த சீசனையும் நடிகர் கமலஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார். மேலும், இந்த சீசனில் வித்தியாசமாக இரண்டு வீடுகளுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. முதல் நாளே நிகழ்ச்சியில் நாமினேஷன் பட்டியில் அனன்யா, ஐசு, பவா செல்லதுரை, ரவீனா, ஜோவிகா, பிரதீப் ஆண்டனி, யோகேந்திரன் ஆகியோர் பெயர்கள் இடம் பெற்று இருக்கிறது. அதோடு இந்த முறை நிகழ்ச்சி முதல் நாளே கலவரம் தொடங்கிவிட்டது.

- Advertisement -

அந்த வகையில் இந்த வரத்திற்கான கேப்டனாக விஜய் வர்மாவை பிக் பாஸ் தேர்ந்தெடுத்து இருக்கிறது. அப்போதே பிரதீப் ஆண்டனிக்கும் விஜய் வர்மாவுக்கும் இடையே விவாதம் நடைபெற்றது. இதனை அடுத்து சின்ன சின்ன விஷயத்தில் கூட இருவருக்கும் மோதல் இருந்து கொண்டு தான் இருந்தது. அதன் பின் போட்டியாளர்களுக்கு பிடித்த சாப்பாடு செய்யும்போது கூட பிரதீப் ஆண்டனி தனக்கு பிடித்த உணவு குறித்து சொல்லி இருந்தார்.

அதை முடியாது என்று சமைப்பவர்கள் மறுத்திருக்கிறார்கள். இதனால் பிரதீப் ஆண்டனி பெரிய கலவரம் செய்து விட்டார். இதனால் விஜய் வர்மாவிற்கும் பிரதீப்க்கும் இடையே வாக்குவாதம் முற்றிருக்கிறது. அது மட்டும் இல்லாமல் விஜய் வர்மா- மாயா இருவருமே சேர்ந்து பிறரை கலாய்ப்பதை வேலையாக வைத்திருக்கிறார்கள். அதிலும் இவர்கள் இருவரும் சேர்ந்து பிரதீப் ஆண்டனியை ஒவ்வொரு முறையும் கிண்டல் செய்கிறார்கள்.

-விளம்பரம்-

பிரதீப் ஆண்டனி சொன்ன விஷயம்:

இந்த நிலையில் நேற்று எபிசோட்டில் பிரதீப் ஆண்டனி தன்னுடைய வாழ்க்கையின் ஒரு கசப்பான அனுபவத்தை கூறியிருந்தார். அதில் அவர், என்னுடைய அப்பாவே என்னுடைய அம்மாவை கார் ஏற்றி கொன்றுவிட்டார். அதை என் வாழ்க்கையில் மறக்க முடியாது என்று வேதனையாக கூறியிருந்தார். இதற்கு பலருமே வருத்தம் தெரிவித்து அவருக்கு ஆறுதல் கூறியிருந்தார்கள். ஆனால், விஜய் வர்மா கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் கூல் சுரேஷ் இடம் நீங்கள் அவரிடம் பழகுறீர்கள்.

விஜய் குறித்த விமர்சனம்:

பார்த்து பழகுங்கள் உங்களையே போட்டு தள்ளினாலும் தள்ளிடுவான் என்று கிண்டலாக பேசியிருக்கிறார். பின் மற்ற போட்டியாளர்களிடமும் விஜய் ஒரு பெரிய பாஸ் மாதிரி பேசி இருக்கிறார். இப்படி விஜய் வர்மா பேசி இருப்பதை தான் தற்போது நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் கடுமையாக கண்டித்தும் விமர்சித்தும் வருகிறார்கள். இந்த வார இறுதியில் கண்டிப்பாக கமல் இது குறித்து கண்டிப்பார் என்றும் கூறி வருகிறார்கள்.

Advertisement