சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த புகாரில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகருக்கு யாஷிகா ஆனந்த் தனது ஆதரவை தெரிவித்து இருக்கிறார். தமிழில் இளம் வயதில் அறிமுகமாகி பின்னர் ஒரு சில படங்களில் நடித்த யாஷிகா ஆனந்த் சமூக வலைதளத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு பிரபலமானார். அதன் பின்னர் இவருக்கு பிக் பாஸில் கலந்துகொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது. பிக் பாஸுக்கு பின்னர் இவருக்கு ஏகப்பட்ட புகழ் ஏற்பட தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.
இப்படி ஒரு நிலையில் இவர் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த புகாரில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள நடிகருக்கு தனது ஆதரவை தெரிவித்து உள்ளார். இந்தியில் மிகவும் பிரபலமான சீரியலில் ஒன்று ‘நாகினி’ தொடர். இந்தியில் மட்டுமல்லாது இந்தியா முழுக்க இந்த தொடர் ‘நாகினி 2’, ‘நாகினி 3’ அடுத்தடுத்து பாகங்களை கடந்து சென்று கொண்டு இருக்கிறது.
இதையும் பாருங்க : மலர் டீச்சராக அவரை நடிக்க வைக்க நிவீன் பவுலி கூட எவ்ளோவோ முயற்சித்தார் முடியல – பிரேமம் இயக்குனர் சொன்ன சீக்ரெட்.
மேலும், இந்த தொடர் தமிழில் கூட டப்பிங் செய்யப்பட்டு ஒளிபரப்பானது. தற்போது நாகினி 3யில் நாயகனாக நடிகர் பேர்ல் வி புரி என்பவர் நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே இந்தியில் பல சீரியல்களில் நடித்து உள்ளார். இப்படி ஒரு நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு வயது சிறுமிக்கு நடிக்கும் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி பாலியல் வன்புணர்வு செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட அந்த சிறுமி அளித்த புகாரின் பேரில் பேர்ல் வி புரி மற்றும் அவருடைய நண்பர்கள் என மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், பேர்ல் வி புரி இந்த குற்றத்தை செய்து இருக்க மாட்டார் என்று பல பிரபலங்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை யாஷிகா, பேர்ல் வி புரி தன்மையாக பேசக்கூடிய நபர். எனக்கு தெரிந்த நல்ல மனிதர்களில் ஒருவர். உண்மைக்காக காத்திருப்போம். நான் பேர்ல் வி புரிக்கு ஆதரவாக இருக்கிறேன். என்னுடைய நண்பர் திரும்பி வருவார் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.