- Advertisement -
இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் காமெடி படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் அறியப்பட்டவர் நடிகை யாஷிகா ஆனந்த். அதன் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.
-விளம்பரம்-
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார் யாஷிகா. யோகி பாபுவுடன் ‘ஜாம்பி’ என்ற படத்திலும் மஹத்துடன் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் யாஷிகா சமீபத்தில் ட்விட்டரில் லைவ் சாட்டில் வந்தார்.
- Advertisement -
அப்போது ரசிகர் ஒருவர், நீங்கள் அஜித்துடன் நடிக்க வேண்டும் என்று கூற, அதற்கு யாஷிகா ‘நீங்கள் அவரிடத்தில் போய் சொல்லுங்க, அவருடன் நடிக்க நான் நடிக்க மிகவும் ஆசை படுகிறேன் என்று. அப்போதுவது அவர் கேட்பார்’ என்று பதில் கூறியுள்ளார்.
Advertisement