இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்றிருந்த யாஷிகா அடிக்கடி ஸ்மோக்கிங் அறைக்கு சென்று வந்த வண்ணம் இருந்தார். ஆனால், யாஷிகா உண்மையில் புகைபிடிப்பாரா என்று ரசிகர்களுக்கு ஒரு கேள்வியாகவே இருந்தது. பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களில் மஹத் புகைபிடிப்பார் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், ஐஸ்வர்யா, யாஷிகா, வைஷ்ணவி ஆகியோர் புகைபிடிப்பார்கள் என்று பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகர் பொன்னம்பலம் ஏற்கனவே கூறியிருந்தார். இதன் மூலம் யாஷிகாவும் புகைபிடிப்பார் என்பது ரசிகர்கள் அனைவரும் அறிந்து கொண்டனர். பிக் பாஸ் வீட்டில் தனி அறையில் புகைபிடித்து வந்த யாஷிகா தனது அம்மா முன்பே சிகிரெட் பெட்டி தெரியும்படி வைத்துள்ள புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.Eppayachu na ok. Epoome na epdi? #BiggBossTamil2 #BiggBoss2 #BiggBossTamil #BiggBossTamilSeason2 pic.twitter.com/crFa4DEfY8
— Troll Bigg Boss Tamil 2 (@BigBossTroll_) October 1, 2018

கடந்த ஞாயிற்று கிழமை பிக் பாஸ் நிகழ்ச்சியின் நிறைவு நாளின் போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற அனைவரும் சிறப்பு விருந்தினராக வந்திருந்தனர். இந்த விழாவின் போது நடிகை யாஷிகா தனது அம்மாவுடன் புகைப்படம் ஒன்றை எடுத்துக்கொண்டார். அந்த புகைப்படத்தில் யாஷிகா நின்றுகொண்டிருக்கும் மேஜைக்கு உன்பாக சிகெரெட் பெட்டி ஒன்றும் இருக்கிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அம்மா முன்னாடியே இப்படியா என்று விமர்சித்து வருகின்றனர்.




