அஜித் வீட்டில் திடீர் சோதனை – அட, கொடுமையே இந்த டைம்ல கூடவா இப்படி பண்ணுவாங்க.

0
1825
ajith
- Advertisement -

தமிழ் சினிமாவில் தல என்ற அந்தஸ்துடன் பல ஆண்டுகளாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் அஜித். விஸ்வாசம் படத்தை தொடர்ந்து தற்போது தல அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து உள்ளார். பல மாதங்களாக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் பற்றிய அறிவிப்பை அப் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்டு இருக்கிறார். நீண்ட மாதமாக வலிமை அப்டேட் வராததால் அஜித் ரசிகர்கள் யாரை பார்த்தாலும் வலிமை அப்டேட்டை கேட்க ஆரம்பித்தனர்.

-விளம்பரம்-

வரமுறை இல்லாமல் தேவையில்லாத இடத்தில் எல்லாம் அப்டேட் கேட்கும் ரசிகர்களால் கடுப்பான அஜித் தனது ரசிகர்களின் செய்யல்பாட்டால் வருந்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டு, தக்க நேரத்தில் வலிமை அப்டேட் வரும் என்று கூறினார் அஜித்.மே 1 ஆம் தேதி அஜித் பிறந்தநாளில் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருந்த நிலையில் அதுவும் வெளியாகவில்லை.

இதையும் பாருங்க : நடிகை ஸ்ரேயாவா இது -சிறு வயத்தில் எப்படி இருக்கிறார் பாருங்க. அறிய புகைப்படம்.

- Advertisement -

இப்படியொரு நிலையில் அஜீத் வீட்டிற்கு மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருக்கிறார். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதுகுறித்து போலீசாருக்கு புகார் தெரிவிக்க அஜித் வீட்டில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்து உள்ளனர். போன் செய்த மர்ம நபரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

கடந்த ஆண்டு ஜூலை மாதமும் இதே போல அஜீத் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்து இருந்தது தகவலறிந்து அஜித் வீட்டிற்கு போலீசார் சென்று சுமார் ஒன்றரை மணி நேரம் சோதனை நடத்தினர். ஆனால், வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை தேடிய போலீசார் மரக்காணத்தை சேர்ந்த புவனேஸ்வரன் என்பவரை கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement