ஏ.ஆர்.ரகுமான் என் இசைக்கருவியை வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்றார் – பிரபல இசைக் கலைஞர்

0
323
arr
- Advertisement -

வலுக்கட்டாயமாக என்னுடைய இசைக்கருவியை ஏ ஆர் ரகுமான் தூக்கிச் சென்றார் என்று செலோ செல்வராஜ் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்திய அளவில் புகழ் பெற்ற திரைப்பட இசையமைப்பாளராக திகழ்பவர் ஏ. ஆர். ரகுமான். இவர் சிறுவயதில் தூர்தர்ஷன் சேனலில் ஒளிபரப்பான `வொன்டர் பலூன்’ என்ற நிகழ்ச்சியில் வாசித்துப் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலமாகி இருந்தார். அதன் பின்னர் இவர் பல இசைக் கச்சேரிகளில் கலந்து கொண்டு தன்னுடைய தனித்துவத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

-விளம்பரம்-

மேலும், இவர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா என்ற திரைப்படத்தின் மூலம் தான் தன்னுடைய இசை பயணத்தை தொடங்கி இருந்தார். இவர் தனது முதல் படத்திலேயே தேசிய விருதையும் பெற்றார். அதோடு, ஏ ஆர் ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகமானது ரோஜா படம் என்றாலும் அதற்கு முன்பாக இளையராஜா, டி ராஜேந்தர் என்று பல்வேறு இசையமைப்பாளர்களிடம் உதவியாளராக பணியாற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார்.

- Advertisement -

ரகுமான் இசைப்பயணம்:

இரண்டு ஆஸ்கர் விருதை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றவர் ரகுமான். தற்போது உலக அளவில் புகழ்பெற்ற இசை அமைப்பாளராக ஏ ஆர் ரகுமான் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் கமிட்டாகி பிசியாக இருக்கிறார். தற்போது இவர் இயக்குநர் மணிரத்னத்தின் பல ஆண்டு கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் படத்தில் இசையமைத்து இருக்கிறார். மணிரத்னத்தின் திரைவாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக பிரம்மாண்டமாக இந்த திரைப்படம் தயாராகி இருக்கிறது.

செலோ செல்வராஜ் குறித்த தகவல்:

இந்த படம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இப்படி 30 ஆண்டுகளுக்கும் மேலாக இவருக்கு பின்னணி இசை கருவிகளை வாசித்த மூத்த இசைக்கலைஞர் செலோ செல்வராஜ். இவர் இசை துறையில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வருகிறார். இவர் பல்வேறு மொழிகளில் 200க்கும் மேற்பட்ட இசையமைப்பாளர்களுடன் பணியாற்றி இருக்கிறார். ஆயிரக்கணக்கான பாடல்களுக்கு பல இசைக்கருவிகளை பயன்படுத்தி இருக்கிறார். இவர் இசையமைப்பாளர் மட்டுமில்லாமல் நடிகர், மிமிக்ரி, கலைஞர் என பன்முகங்களைக் கொண்டிருக்கிறார்.

-விளம்பரம்-

செலோ செல்வராஜ் அளித்த பேட்டி:

இந்நிலையில் ஏ ஆர் ரகுமானுடனான தன்னுடைய இசை பயணத்தை பிரபல பத்திரிக்கைக்கு செல்வராஜ் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருந்தது, பாலச்சந்திரனின் புன்னகை மன்னன் என்ற படத்திற்கு இசையமைத்தேன். அப்போது இந்தியாவிலேயே முதன் முதலாக இளையராஜா பாடல்கள் கணினியை பயன்படுத்தி பதிவு செய்திருந்தார்கள். அதற்கு ப்ரோகிராமி, சாம்பிளிங், மிக்சிங் எல்லாம் செய்தவர் ரகுமான் தான். அப்போதிலிருந்து எங்களுடைய நட்பு பயணம் தொடங்கியது. பின் ரோஜா பட பாடல்கள் ரிக்கார்டிங்கில் வயலின், செலோ வாசிக்க ரஹ்மான் என்னை அழைத்திருந்தார். அப்போது நான் வேறு இசையமைப்பாளர்களின் ரெக்கார்டிங்கில் பிஸியாக இருந்தேன். அதனால் என்னால் வர முடியாது என்று சொல்லிவிட்டேன்.

ரகுமான் குறித்து சொன்னது:

அப்போது ரகுமான் ஒரு வெள்ளை அம்பாசிடர்வைத்திருந்தார். நான் ரோஜா பட பாடலுக்கு வாசிக்க கண்டிப்பாக வரவேண்டும் என்று அழைத்து இருந்தார். ஆனால், நான் முடியாது என்று மறுத்து விட்டேன். பின் அவர் என்னுடைய செலோ கருவியை அவருடைய காரின் உள்ளே வைத்துக் கொண்டு எடுத்து சென்று விட்டார். வேறு வழி இல்லாமல் நான் அவரை பின்தொடர்ந்து அவருடைய ஸ்டுடியோவுக்கு சென்று ரோஜா பட பாடல்களுக்கு வாசித்தேன். இப்படி எங்களுடைய இசை பயணம் 30 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்கிறது. இன்றும் அவருடைய பாடல் ரெக்கார்டிங் உள்நாடு, வெளிநாடு, கச்சேரிகளுக்கு நான் வாசித்து வருகிறேன். மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படத்தின் பாடலுக்கு ரகுமான் துபாய் சென்றிருந்தார். அங்கு பழங்கால இசைக்கருவிகளை தேடி வாங்கி பயன்படுத்திருந்தார். பின்னணி இசைக்கு என்னுடைய டபுள் பாஸ், செலோ, வயோலா, வயலின், கிளாரினெட், டிரம்பெட் கருவிகளை பயன்படுத்தி இருக்கிறார் என்று கூறியிருந்தார்.

Advertisement