குக் வித் கோமாளி சீசன் 4ல் பைனலுக்குள் நுழைந்த முதல் போட்டியாளர் – யார் தெரியுமா ?

0
2472
- Advertisement -

குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியின் முதல் பைனலிஸ்ட் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் மூன்று சீசன்கள் கடந்த ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது. மேலும், முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து மூன்று சீசனும் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

-விளம்பரம்-

அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். அதுமட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சி டாப் ரேட்டிங்கில் இருக்கிறது. அதிலும் கொரோனா லாக்டவுனில் மக்களுக்கு இருந்த பிரச்சனைக்கு மருந்தாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்தது என்றே சொல்லலாம். இந்த நிகழ்ச்சி சமையல் மட்டும் இல்லாமல் பலரையும் சிரிக்க வைக்கும் நிகழ்ச்சியாக இருக்கிறது. இப்படி பட்ட நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 4வது சீசன் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.

- Advertisement -

குக் வித் கோமாளி 4 :

அதோடு இந்த சீசனில் புதிய கோமாளிகளும் கலந்து கொண்டுள்ளனர். இதில் நடிகை ஷெரின், விசித்ரா, மேகா பட நடிகை ஸ்ருஷ்டி, விசித்ரா, பட நடிகை ஆண்ட்ரியான், ராஜ் ஐயப்பா, பாக்கியலட்சிமி சீரியல் VJ விஷால், கிஷோர் ராஜ்குமார், காளையன் , மைம் கோபி, ஜி பி முத்து, சிங்கப்பூர் தீபன், மணிமேகலை, சுனிதா, ரவீனா, தங்கதுரை, சில்மிஷம் சிவா, மோனிஷா போன்றோர் கலந்து கொண்டுள்ளார். அதோடு மூன்று சீசன்களாக கோமாளியாக வந்த சிவாங்கி இந்த முறை குக்காக வந்து இருக்கிறார்.

நிகழ்ச்சி குறித்த தகவல்:

இந்த முறை நிகழ்ச்சியில் 10 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இடையில் இந்த நிகழ்ச்சியில் பழம்பெரும் நடிகர் நாகேஷின் பேரனும், நடிகர் ஆனந்த் பாபுவின் மகனுமான கஜேஷ், கலை இயக்குநர், நடிகருமான கிரண் ஆகியோர் வையில் கார்ட் எண்ட்ரி கொடுத்தனர். இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து கிஷோர், ராஜ் ஐயப்பா, விஜே விஷால், ஷெரின், காளையன், கஜேஷ், ஆன்ட்ரியன் உள்ளிட்ட பல போட்டியாளர்கள் எலிமினேட் ஆகிருக்கிறார்கள்.

-விளம்பரம்-

வெளியேறிய நபர்கள்:

தற்போது இந்த நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. மேலும், இந்த வாரம் நிகழ்ச்சியின் டிக்கெட் டு ஃபினாலே சுற்று நடைபெறுகிறது. இதில் விசித்திரா, மைம் கோபி, கிரண், ஸ்ருஷ்டி மற்றும் சிவாங்கி என 5 போட்டியாளர் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடியிருந்தார்கள். மேலும், இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக இந்திய கிரிக்கெட் வீரர்கள் வெங்கடேஷ் ஐயர் மற்றும் வருண் சக்கரவர்த்தி வந்தது போட்டியாளர்களுக்கு மட்டுமில்லாமல் ரசிகர்களுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தார்கள்.

நேரடியாக பைனலுக்கு தேர்வான நபர்:

இந்த நிலையில் இறுதி போட்டியில் விசித்ரா நன்றாக சமைத்து நடுவர்களிடம் பாராட்டுகளை பெற்றிருந்தார். அதோடு இவர் நேரடியாக பைனல் லிஸ்ட் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று நடுவர்கள் அறிவித்திருத்து இருக்கிறார்கள். இந்த எபிசோடு இன்று ஒளிபரப்பாக இருக்கிறது. இதனால் ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். விசித்ரா பெயர் வந்த உடனே சிவாங்கியின் முகம் மாறிவிட்டது. சிவாங்கி நேரடியாக பைனலுக்கு செல்வார் என்று எதிர்பார்த்தார். ஆனால், விசித்திரா சென்றது அவருக்கு வருத்தமாக இருக்கிறது.

Advertisement