மார்க் ஆண்டனி படத்தை தடை செய்ய வேண்டும் – புதிய சர்ச்சையை கிளப்பிய திருநங்கை. என்ன காரணம்?

0
1146
- Advertisement -

மார்க் ஆண்டனி திரைப்படத்தை தடை செய்ய கோரி கோவையைச் சேர்ந்த திருநங்கை ஜாஸ்மின் மதியழகன் என்பவர் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் இன்று (செப்.19) புகார் மனு அளித்தார். தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவர் விஷால். தற்போது இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் மார்க் ஆண்டனி. இந்த படத்தை வினோத் குமார் தயாரித்திருக்கிறார் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் செல்வராகவன், எஸ் ஜே சூர்யா, அபிநயா, ரிது வர்மா, செல்வராகவன், நிழல்கள் ரவி, Y.G. மகேந்திரன் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஜி வி பிரகாஷ் இசை அமைத்து இருக்கிறார்.

-விளம்பரம்-

கதைக்களம்:

படத்தில் செல்வராகவன் டைம் டிராவல் செய்யும் கருவியை கண்டுபிடிக்க முயற்சிக்கிறார். பல வருடங்களாக இதற்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறார். பின் 1975 இல் போன் மூலம் டைம் ட்ராவல் செய்யும் கருவியை செல்வராகவன் கண்டுபிடிக்கிறார். பின் இந்த டைம் ட்ராவல் கருவியை பயன்படுத்தி தன்னுடைய வாழ்க்கையில் நடந்த விஷயங்கள் எல்லாத்தையும் செல்வராகவன் மாற்றுகிறார். அப்படி அவர் செய்யும் போது தான் அவர் இறந்து விடுகிறார்.

- Advertisement -

படத்தின் கதை:

பின் 20 ஆண்டுகளுக்கு பிறகு 1995இல் டைம் டிராவல் போன் விஷால் உடைய மகனுக்கு கிடைக்கிறது. இதை வைத்து அவர் தன்னுடைய தந்தை ஆன்டனியால் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த கசப்பான விஷயங்களை மாற்ற நினைக்கிறார். அதன் பின் என்ன நடந்தது? இதில் எஸ் ஜே சூர்யா வின் பங்கு என்ன? விஷால் நினைத்ததை வெற்றி பெற்றாரா? என்பதே படத்தின் மீதி கதை. இந்த படத்தில் விஷால் அப்பா மற்றும் மகன் ஆகிய இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

புகார் மனு:

மார்க் ஆண்டனி திரைப்படத்தில் திருநங்கைகள் மற்றும் எல் ஜி பி டி சமூகங்களை அவமதிக்கும் விதமாக சில காட்சிகளை வைத்துள்ளனர். அதில் சில காட்சிகள் திருநங்கைகளை அவமானப்படுத்துவதுமாக இருக்கிறது. இதுபோன்ற திரைப்படங்களை எங்களை பத்து ஆண்டுகள் பின்னோக்கி தள்ளப்படுவது திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் அல்லது அந்த குறிப்பிட்ட காட்சிகளை நீக்க வேண்டும் மற்றும் அந்த இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி இருக்கின்றனர். இது குறித்து அவர் கூறுகையில் மார்க் ஆண்டனி  திரைப்படத்தில் திருநங்கைகள் பாலியல் உறவுகளுக்கு அலைவது போலவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

-விளம்பரம்-

அவர்களிடம் எந்தவித பாசிடிவ் நிகழ்விலும் காட்டாமல் இருந்துள்ளனர்.  ஒரு காட்சியில் கொலை செய்வதற்காக ஆண்கள் திருநங்கைகள் போல  மேடம் அணிந்து வந்து திருநங்கைகளை கொச்சைப்படுத்தி இருக்கின்றார்கள். பலரும் திரைப்படமாக பாருங்கள் என்று கூறுகிறார்கள் அவர்களிடம் நான் ஒன்றை கேட்கின்றேன் எங்களுக்கு அளிக்க வேண்டிய சலுகைகளை அனைத்தையும் அளித்துவிட்டு பின்பு இந்த இதனை கூறுங்கள் என்றும் அவர் கூறியிருந்தார்.

Advertisement