மாரிமுத்து சார் இப்படி பேசலாமா ? தான் நடிக்கும் சீரியல் குறித்து பேசியதால் தினேஷ் ஆதங்கம்

0
1869
- Advertisement -

கிழக்கு வாசல் சீரியல் குறித்து மாரி முத்து அளித்த பேட்டிக்கு நடிகர் தினேஷ் கொடுத்திருக்கும் விளக்கம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டத்தையும், பெண்கள் உரிமையையும் மையமாக கொண்ட கதை. தற்போது இந்த சீரியல் பல அதிரடி திருப்பங்களுடன் சென்று கொண்டு இருக்கிறது. மேலும், இந்த சீரியலில் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக அசத்தி வருபவர் நடிகர் மாரிமுத்து.

-விளம்பரம்-

சீரியலில் இவர் மதுரை ஸ்லாங்கில் பேசி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருக்கிறார். இந்த சீரியலின் வெற்றிக்கு மாரி முத்துவும் ஒரு முக்கிய காரணம் என்று சொல்லலாம். மேலும், இவர் சீரியலில் நடிப்பதற்கு முன் பாடலாசிரியர் வைரமுத்துவிடம் உதவியாளராக பணியாற்றி இருந்தார். அது மட்டும் இல்லாமல் இவர் பல இயக்குனர்களிடமும் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். அதன் பின் மாரிமுத்து அவர்கள் “கண்ணும் கண்ணும்” என்ற படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால், அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை.

- Advertisement -

மாரிமுத்து திரைப்பயணம்:

அதற்குப் பிறகு இவர் குணச்சித்திர நடிகராகவும் பல படங்களின் நடித்து இருக்கிறார். தற்போது மாரிமுத்து ஜெயிலர், இந்தியன் 2 போன்ற படங்களில் நடித்து வருகிறார். அதோடு சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் இவர் மிரட்டி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் மாரிமுத்து அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர், விஜய் டிவியில் கிழக்கு வாசல் சீரியலில் பண்ண எனக்கு வாய்ப்பு வந்தது. அந்த சீரியல் சம்சாரம் அது மின்சாரம் படத்தின் மாதிரியான கதை.

கிழக்கு வாசல் சீரியல்:

இந்த சீரியலில் விசு கதாபாத்திரம் மாதிரி என்று சொல்லி என்னை ஜெயிலர் சூட்டிங்கில் இருக்கும்போது நேரடியாகவே ராதிகா மேடமே போன் செய்து கேட்டார்கள். அந்த சீரியல் பண்ண முடியாது என்ற சூழல் வந்து விட்டது. அதுவும் பெரிய கேரக்டர் தான். அதற்கு பிறகு தான் அந்த கதாபாத்திரத்தை எஸ் ஏ சந்திரசேகர் சாரிடம் சென்றிருக்கிறது என்று கூறியிருக்கிறார். இப்படி மாரிமுத்து பேசிய விஷயம் தான் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக நடிகர் தினேஷ் அவர்கள் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

-விளம்பரம்-

தினேஷ் பதிவிட்ட வீடியோ:

அதில் அவர் கூறியிருப்பது, மாரிமுத்து சார் இப்படி பேசியிருக்கக் கூடாது. எதிர்நீச்சல் சீரியலில் கூட மாரிமுத்து சார் செலக்ட் ஆகுவதற்கு முன்பாக நிறைய பேர் ஆடிஷனில் கலந்து கொண்டு இருந்திருப்பார்கள். அப்படித்தான் இவரும் கலந்து கொண்டு தற்போது எதிர்நீச்சல் சீரியலில் தன்னுடைய சிறப்பான நடிப்பை கொடுத்துக் கொண்டு வருகிறார். அதே மாதிரி தான் கிழக்கு வாசல் சீரியலிலும் சந்திரசேகர் சாருக்கு முன்பு நிறைய பேரு ஆடிஷன் போய் இருப்பாங்க. இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா பார்க்க கூடாது. நாம நடிக்க முடியாமல் போய்விட்டால் அதைப் பற்றி பேசி அடுத்தவர்களை கஷ்டப்படுத்தக் கூடாது.

கிழக்கு வாசல் சீரியல்:

இதை நான் எல்லோருக்கும் வேண்டுகோளாகவே வைக்கிறேன் என்று கூறியிருக்கிறார். விஜய் தொலைக்காட்சியில் கிழக்கு வாசல் என்ற சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த சீரியலை ராதிகா சரத்குமார் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த சீரியலில் ரேஷ்மா, ஏ எஸ் சந்திரசேகர், வெங்கட் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இந்த சீரியல் விரைவில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது. அதற்கான ப்ரோமோ எல்லாம் வெளியாகி இருக்கிறது.

Advertisement