49 வயது நடிகையை திடீர் திருமணம் செய்த 75 வயது நடிகர். அடுத்த நாளே மருத்துவமனையில் அனுமதி.

0
55062
dipankar dey
- Advertisement -

பெங்காலி மொழியில் மிகப் பிரபலமான நடிகர் திபாங்கர் தே. இவருக்கு தற்போது 75 வயது ஆகிறது. இந்த வயதில் இவர் 45 வயது உடைய நடிகை டோலன் ராய் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இவருக்கு திருமணம் ஆன ஒரே நாளில் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதனால் இவருடைய ரசிகர்கள் மற்றும் திரை உலக பிரபலங்கள் எல்லோரும் சோகத்தில் ஆழ்ந்து உள்ளார். நடிகர் திபாங்கர் தே மற்றும் நடிகை லோடன் ராய் ஆகியோரும் பெங்காலி மொழியில் மிகப் பிரபலமான நடிகர்கள். சின்னத்திரை, வெள்ளித்திரை என அனைத்து துறையிலும் பிசியாக நடித்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் பல ஆண்டுகளாகவே லிவ்விங் டு கெதர் வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள்.

-விளம்பரம்-
Image result for dipankar dey marriage

- Advertisement -

இது குறித்து சோசியல் மீடியாவில் பல விமர்சனங்கள் எழுந்தன. அதற்கு இவர்கள் இருவருமே அதை வெளிப்படையாக ஒப்பு கொண்டார்கள். அதுமட்டும் இல்லாமல் இவர்கள் பல ஆண்டு காலமாக திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வந்தார்கள் என்று கூறுவார்கள். இந்நிலையில் ஜனவரி 16 ஆம் தேதி இவர்கள் இருவரும் தங்களுடைய நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் எளிமையாக திருமணம் செய்து கொண்டார்கள்.

இதையும் பாருங்க : சித்தி 2 வில் சிவகுமாருக்கு பதிலாக சித்தப்பா வேடத்தில் நடிப்பது இவர் தானா ?

இந்த திருமணத்தின் மூலம் வயது முக்கியமில்லை என்று இவர்கள் இருவரும் நிரூபித்து விட்டதாக ரசிகர்கள் கூறுகிறார்கள். அது மட்டும் இல்லாமல் இவர்களுடைய திருமணத்திற்கு ரசிகர்கள் அனைவரும் வாழ்த்துக்களை கூறி வந்தனர். இந்நிலையில் திடீரென்று ஜனவரி 17-ஆம் தேதியன்று நடிகர் திபாங்கர் தே அதாவது நேற்றைய தினம் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உள்ளது. இதனால் அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

-விளம்பரம்-
Image result for dipankar dey admitted in Hospital

மருத்துவர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். திருமணமான ஒரே நாளில் நடிகர் திபாங்கர் தேக்கு இப்படி நடந்து உள்ளது அடுத்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இவர்கள் இருவருடைய திருமணம் பலருக்கு அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது. மேலும் இவருடைய உடல் நிலை சீராக தான் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளார்கள்.

Advertisement