சாமியை தொடர்ந்து மீண்டும் தன் சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க இருக்கும் லிங்குசாமி (மறுபடியும் Tune ஆகி இருக்கார் போல)

0
563
lingusamy
- Advertisement -

20 வருடங்களுக்கு பிறகு பிரபல இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் உருவான சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான இயக்குனராக திகழ்பவர் லிங்குசாமி. இவர் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டத்தில் பிறந்தவர். இவர் இயக்குனர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர் என பன்முகம் கொண்டு விளங்குகிறார். இவர் திருப்பதி புரோடக்சன் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் முதலில் இயக்குனர் விக்ரமனின் உதவி இயக்குனராக பணிபுரிந்தார்.

-விளம்பரம்-

பிறகு 2001 ஆம் ஆண்டு வெளிவந்த ஆனந்தம் என்ற திரைப்படத்தை இயக்கி முதன் முதலாக தமிழ் சினிமா உலகிற்கு இயக்குனராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் ரன், சண்டக்கோழி, பையா, வேட்டை, அஞ்சான் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். மேலும், இவர் இயக்கிய படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் அதிக வசூலையும் பெற்றிருக்கிறது.இந்த நிலையில் இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் உருவான சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகியுள்ளது. கடைசியாக இவர் விஷாலின் சண்டக்கோழி 2 என்ற படத்தை இயக்கி இருந்தார்.

இதையும் பாருங்க : ஒரு பிட்டு படம் நடி வேற லெவல் போய்டுவ, அதுவும் உன்னோட அந்த’ படு ஆபாசமாக கமன்ட் செய்தவருக்கு Vj பார்வதி கொடுத்த பதிலடி.

- Advertisement -

ராம் பொத்தினேனி-லிங்குசாமி கூட்டணி:

தற்போது இயக்குனர் லிங்குசாமி அவர்கள் பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நடித்து வரும் ‘தி வாரியர்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் ராம் பொத்தினேனி முதல் முறையாக காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். ஏற்கெனவே, தமிழில் லிங்குசாமி இயக்கிய ‘வேட்டை’ படமும் காவல்துறை கதைக்களத்தைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். ஆதி வில்லனாகவும், பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும், இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் திரைக்கு வரவுள்ளது.

லிங்குசாமி இயக்கும் புது படம்:

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. இந்த நிலையில் லிங்குசாமியின் அடுத்த படம் பற்றிய தகவல் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. அதுஎன்னவென்றால், லிங்குசாமியின் சகோதரரும், திருப்பதி பிக்சர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரும் ஆன சுபாஷ் சந்திரபோஸ் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்று போட்டிருக்கிறார்கள்.அதில் அவர்கள், ரன் படத்தின் பார்ட்-2 விரைவில் என்று குறிப்பிட்டுள்ளார்கள். 2002ஆம் ஆண்டு இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த படம் தான் ரன்.

-விளம்பரம்-

ரன் 2 படத்தின் தகவல்:

இந்த படத்தில் மாதவன், மீரா ஜாஸ்மின், விவேக், ரகுவரன் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்தின் மூலம் தான் நடிகை மீரா ஜாஸ்மின் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இதற்கு முன் சாக்லேட் பாயாக இருந்த மாதவனை இந்த படம் மூலம் ஆக்ஷன் நாயகனாக மாற்றியது. இந்த படம் மிகப்பெரிய அளவில் சூப்பர் ஹிட் கொடுத்தது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்திற்காக பல விருதுகள் கிடைத்திருக்கிறது. இந்த நிலையில் தற்போது 20 வருடங்கள் கழித்து லிங்குசாமி இயக்கிய ரன் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஹீரோயினி பற்றிய தகவல்:

அதுமட்டுமில்லாமல் கடந்த சில மாதங்களாகவே மீரா ஜாஸ்மின் மீண்டும் சமூக வலைத்தளங்களில் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருப்பது அனைவருக்குமே தெரியும். இந்த நிலையில் ரன்- 2 படம் விரைவில் என்று குறிப்பிட்டதன் மூலம் இந்த படத்திலும் மாதவனுக்கு ஜோடியாக மீரா ஜாஸ்மின் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் ரன் படத்தைப் போல இந்த படத்திலும் மாஸ் காட்சிகள் இருக்குமா? இந்த படத்திலும் மாதவனே நடிப்பாரா? என்று ரசிகர்கள் ஆவலுடன் பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கின்றனர். இதற்கு இயக்குனர் லிங்குசாமி தரப்பில் இருந்து என்ன பதில் வரப்போகிறது? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement