அந்த படம் வந்தா என் ரேஞ்ஜே வேறன்னு போய் சொல்லுங்க. இயக்குனரிடம் கூறியுள்ள அஜித்.

0
85840
ajith
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் அல்டிமேட் ஸ்டார் ஆக பட்டையை கிளப்பிக் கொண்டிருப்பவர் தல அஜித். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த ‘விசுவாசம் , நேர்கொண்டபார்வை’ ஆகிய படங்கள் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை படைத்தது. இதனை தொடர்ந்து தற்போது தல அஜித் அவர்கள் இயக்குனர் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் “வலிமை” என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மேலும், இந்த படத்தின் பிற நடிகர்கள் குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை.

-விளம்பரம்-

வீடியோவில் 3 நிமிடத்திற்கு பின் பார்க்கவும்

- Advertisement -

இந்த நிலையில் தல அஜித் அவர்கள் தன்னுடைய சினிமா திரை உலகில் அவர் நடிப்பதாக இருந்த பல படங்கள் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர் கையை விட்டு சென்று உள்ளது. அப்படி அவர் நடிப்பதாக இருந்த படத்தில் பிற நடிகர்கள் நடித்து அந்த படங்கள் மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்து இருக்கிறது. தல அஜித் அவர்களின் நடிப்பில் எவ்வளவோ படங்கள் கைநலிவி சென்று உள்ளது. அந்த வகையில் 2000 ஆம் ஆண்டு இயக்குனர் எழில் இயக்கத்தில் பிரபுதேவா, சரத்குமார், ஜெயா சீல் அவர்களின் நடிப்பில் வெளிவந்த படம் பெண்ணின் மனதை தொட்டு. இந்த படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. ஆனால், இந்த படத்தில் முதலில் அஜீத் தான் நடிப்பதாக இருந்ததாம்.

இதுகுறித்து இயக்குனர் எழில் அவர்கள் சமீபத்தில் பேட்டியில் மனம் திறந்து கூறியுள்ளார். அதில் அவர் கூறியது, பெண்ணின் மனதை தொட்டு படத்தில் முதலில் அஜித் சார் தான் பண்ண வேண்டியிருந்தது. அந்த படத்தின் தயாரிப்பாளர் காஜாவுக்கும், தல அஜித்துக்கும் இடையே ஒரு சின்ன சம்பள பிரச்சினை. அதனால் தான் அஜித் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது. அப்ப அஜித் சார் சொன்னார் வாலி படம் வந்தா என்னுடைய ரேஞ்சே வேறன்னு. பின் நீங்க போய் தயாரிப்பாளர் இடம் சொல்லுங்க என்று, நானும் தயாரிப்பாளர் இடம் எவ்வளவோ கேட்டுப் பார்த்தேன்.

-விளம்பரம்-

ஆனால், அவர் ஒத்துக்கொள்ளவில்லை. அதற்கு பிறகு தான் நடிகர் பிரபு தேவாவை வைத்து இயங்கினோம். அஜித் சொன்ன மாதிரியே வாலி படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டாச்சு. அப்புறம் அஜித் சார் தயாரிப்பாளர்னால இந்த படம் பண்ண முடியாம போச்சு என்று சொன்னாரு. அதுக்கப்புறம் தான் நான் அவரோட பூவெல்லாம் உன் வாசம், ராஜா ஆகிய படங்களை பண்ணினேன். பொதுவாகவே அஜித் சார் ஷூட்டிங் நேரத்தில் மூத்த கலைஞர்களுக்கு மரியாதை கொடுத்து, அவர்களுக்கு விட்டுக்கொடுத்து காத்திருப்பார். அது நிஜமாகவே யாராலும் பண்ண முடியாத விஷயம் என்று கூறினார்.

Advertisement