எங்க அப்பா என் அக்காவ அப்படி தான் கூப்புடுவார் – குஷி படத்தில் ஜோதிகாவின் செல்லப்பெயர் குறித்து பேசி மேடையில் கலங்கிய Sj சூர்யா.

0
969
sjsurya
- Advertisement -

விருது விழாவில் தன் அக்கா குறித்து எஸ்.ஜே.சூர்யா கூறி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் எஸ்.ஜே.சூர்யா. இவர் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், திரைப்பட தயாரிப்பாளர் என பன்முகங்களை கொண்டவர். ஆரம்பத்தில் இவர் துணை இயக்குனராக தான் பணியாற்றி இருந்தார். அப்படியே படங்களில் ஒரு சில காட்சியில் நடித்தும் இருந்தார் எஸ் ஜே சூர்யா. அதன் பின்னர் இவர் அஜித் குமார் நடித்த “ஆசை ” படத்தில் துணை இயக்குனராக இருந்த போது அஜித்திடம் கதை கூறி இருக்கிறார்.
பின் எஸ் ஜே சூர்யா சொன்ன கதை அஜித்திற்கு பிடித்து போக “வாலி ” படத்தை ” இயக்கி இருந்தார்.

-விளம்பரம்-

இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. அதன் பின் விஜய்யின் குஷி படத்தையும் எஸ் ஜே சூர்யா தான் இயக்கி இருந்தார். இப்படி தமிழ் சினிமாவின் இரு முன்னணி நடிகர்களின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக எஸ் ஜே சூர்யாவின் படம் அமைந்திருந்தது. அதற்கு பிறகு இவர் நியூ, அன்பே ஆருயிரே, கள்வனின் காதலி போன்ற பல படங்களை நடித்தும், தயாரித்தும் இருந்தார். பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு எஸ் ஜே சூர்யா அவர்கள் இசை படத்தின் மூலம் கம்பேக் கொடுத்து இருந்தார்.

இதையும் பாருங்க : ஒரு வழியாக சூர்யா லுக்கின் போஸ்டரை வெளியிட்ட விக்ரம் படக்குழு – வைட்டிங்லயே வெறி ஏறுதே.

- Advertisement -

எஸ் ஜே சூர்யாவின் திரைப்பயணம்:

அதுமட்டும் இல்லாமல் இவர் மகேஷ் பாபுவின் ஸ்பைடர் படத்திலும், விஜயின் மெர்சல் படத்திலும் வில்லனாக நடித்து இருந்தார். இந்த படங்கள் மூலம் ரசிகர்களிடையே இவருக்கு பெருத்த வரவேற்பு கிடைத்து இருந்தது. அதனை தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யா அவர்கள் தமிழ், தெலுங்கு என இரு மொழி படங்களிலும் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டி இருக்கிறார். பின் இவர் ஹீரோவாக நடித்து இருந்த மான்ஸ்டர் படம் மிக பெரிய அளவில் பெற்று இருந்தது. அதனை தொடர்ந்து இவர் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ என்ற திகில் படத்தில் நடித்து இருந்தார்.

எஸ் ஜே சூர்யா நடிக்கும் படங்கள்:

இந்த படம் வெளியாகி ஓரளவு வெற்றி பெற்று இருந்தது. கடந்த ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகி இருந்த மாநாடு படத்தில் எஸ் ஜே சூர்யா நடித்து இருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிம்புவின் மாநாடு படம் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு இருந்தது. பல போராட்டங்கள், பிரச்சனைகளை கடந்து தான் மாநாடு படம் வெளியாகி இருந்தது என்பது அனைவருக்கும் தெரிந்தது. இதனை தொடர்ந்து எஸ் ஜே சூர்யா அவர்கள் சிவகார்த்திகேயன் டான் படத்தில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

சிவகார்த்திகேயனின் டான் படம்:

அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்திருந்த சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் சமீபத்தில் தான் வெளியாகி இருந்தது. அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இந்த படத்தை இயக்கியிருக்கிறார். மேலும், படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இதனை தொடர்ந்து எஸ் ஜே சூர்யா அவர்கள் இறவாக்காலம், பொம்மை போன்ற பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து கொண்டு வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் எஸ் ஜே சூர்யா கலந்து கொண்டிருந்தார். அப்போது அவர் கூறியிருந்தது,

தன் அக்கா குறித்து எஸ்.ஜே.சூர்யா சொன்னது:

குஷி படத்தில் ஜோதிகா மேடமை செல்வி என்ற பெயரில் அவருடைய தந்தை விஜயகுமார் அழைப்பார். அது என்னுடைய அக்கா செல்வியின் பெயர் தான். ஏனென்றால், என்னுடைய அப்பா, அக்காவை செல்வி என்று தான் செல்லமாக அழைப்பார். அதனால் என்னுடைய அப்பா கெட்டப்பில்விஜயகுமாரை நடிக்க வைத்து இருந்தேன். அதேபோல் என்னுடைய அப்பா பெயரையும் எழுத வைத்திருப்பேன். அந்த படத்தை என்னால் மறக்க முடியாது என்று கூறி இருந்தார். பின் அவர் அக்கா மேடைக்கு வந்திருந்தார். தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.

Advertisement