தொகுப்பாளினியாக இருந்துவரும் டிடி சமீப காலமாக படங்களில் அதிகமாக நடித்து வருகிறார். படங்களில் நடிப்பதற்குக் கூட இவரது கணவர் வீட்டில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. மேலும் சுச்சி லீக்கில் டிடியின் புகைப்படம் வெளியான விஷயம், வி.ஐ.பி-2 படத்தின் டைட்டில் கார்டில் ‘செல்வி திவ்யதர்ஷினி’ என பெயர் போட்டது, இவையெல்லாம் கணவர் வீட்டில் பெரிய பிரச்சனை ஆக தற்போது விவாகரத்து கோரியுள்ளார் டிடி.
இந்த விவாகரத்து விசயத்திற்கு பிறகு டீவி நிகழ்ச்சிகளில் தலை காட்டாத டிடி தற்போது ஒரு பாடல் வீடியோவில் நடித்துள்ளார். இந்த பாடல் காதல் கலந்த ஒரு பாடலாக, இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளர்.இந்த பாடல் குறித்து டிடி மற்றும் கௌதம் வாசுதேவமேனன் ஆகிய இருவரும் பேட்டி கொடுத்துள்ளனர். மேலும் டிடி தனது காதல் பற்றியும் கூறியுள்ளார்.
டிடியிடம் முதல் காதல் பற்றி கேட்டதற்கு அவர் கூறிய பதிலானது,
எனக்கு காதல் பிடிக்கும். ஆனால் எனக்கு காதல் வந்ததில்லை. முதல் காதலும் இதுவரை இல்லை. ஆனால் ஒரு சிலர் மீது க்ரஷ் வந்துள்ளது. ஆனால், மிகவும் ஆழமான காதல் எதுவும் என வாழ்க்கையில் இதுவரை வந்ததில்லை எனக் கூறினார் டிடி.
தனது முன்னாள் கனவருடன் காதல் மற்றும் வீட்டின் சம்மதத்துடம் திருமணம் செய்துகொண்ட டிடி தற்போது அதற்கு முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் ரசிர்களை டிடியை கலாய்த்து வருகின்றனர்.