இப்படி பண்ணா எப்படி வேலை செய்ய முடியும் – செல்லம்மா தொடரில் இருந்து வெளியேறிய காரணத்தை சொன்ன ஜெனி.

0
987
chellamma
- Advertisement -

பாக்கியலட்சுமி சீரியல் நடிகை திவ்யா கணேஷ் செல்லம்மா தொடரில் இருந்து விலகி இருந்த நிலையில் தற்போது விலகியதற்கான காரணத்தை கூறியுள்ளார் திவ்யா. தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் டிஆர்பி ரேட்டிங்கில் டாப்பில் இருப்பது பாக்கியலட்சுமி சீரியல் தான். இந்த தொடர் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ரா நடிக்கிறார்.

-விளம்பரம்-

பாக்கியா கணவர் கோபி கதாபாத்திரத்தில் சதீஷ் நடித்து வருகிறார். மேலும், இந்த தொடரில் இவர்களுடன் ரேஷ்மா, விஷால், ரித்திகா, வேலு லட்சுமணன், நேகா மேனன் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த தொடர் பெண்கள் எல்லோரும் குடும்பத்திற்காக எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள், போராடுகிறார்கள் என்பதை மையப்படுத்திய கதை. தற்போது சீரியலில் காலணி Secretary தேர்தலில் பாக்கியலட்சுமி- ராதிகா இருவரும் போட்டி போட்டு இருந்தார்கள்.

- Advertisement -

பாக்கியலட்சுமி சீரியல்:

அதில் பாக்கியா அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் ராதிகாவை வெற்றி பெற்றிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் கேண்டீன் காண்ட்ராக்ட் பாக்யாவிற்கு கிடைக்கிறது. இப்படி அடுத்தடுத்து பல திருப்பங்களுடன், சுவாரசியத்துடன் சீரியல் சென்று கொண்டிருக்கிறது. மேலும், இந்த தொடரில் ஜெனிபர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் திவ்யா கணேஷ். இவர் சின்னத்திரை சீரியல் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார்.

திவ்யா கணேஷ் நடிக்கும் சீரியல்:

இவர் ஏற்கனவே லட்சுமி வந்தாச்சு, சுமங்கலி போன்ற பல தொடர்களில் நடித்து இருக்கிறார். இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கேளடி கண்மணி தொடர் மூலம் தான் மக்கள் மத்தியில் அறிமுகமானார். தற்போது பாக்கியலட்சுமி சீரியல் மூலம் தனெக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்து இருக்கிறார். அதேபோல் திவ்யா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செல்லம்மா என்ற தொடரிலும் மேகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

செல்லம்மா சீரியல்:

இந்த தொடரும் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த தொடரில் வில்லியாக மேகா என்ற கதாபாத்திரத்தில் திவ்யா நடித்து இருந்தார். இந்நிலையில் தற்போது செல்லம்மா சீரியலில் இருந்து திவ்யா விலகி இருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.அவருக்கு பதிலாக தற்போது புதிய மேகா கதாபாத்திரத்தில் ஸ்ரேயா என்பவர் நடிக்க வந்திருக்கிறார். அந்த எபிசோடும் சீரியலில் ஒளிபரப்பாகி இருக்கிறது.

திவ்யா விலக காரணம் :

இப்படி ஒரு நிலையில் செல்லம்மா தொடரில் இருந்து வெளியேறிய காரணம் குறித்து பேசி இருக்கும் திவ்யா ‘என்னுடைய சொந்த பிரச்சனையால் நான் அந்த சீரியலில் இருந்து விலகிவிட்டதாக சொல்கிறார்கள். ஆனால் நான் அப்படி சொல்ல மாட்டேன். என்னுடைய சொந்த விஷயத்தினால் நான் வெளியேறவே இல்லை. என்னை அங்கே சிலர் வேலை செய்ய விடாமல் சிலர் தொந்தரவு செய்வதால் தான் இந்த சீரியலில் இருந்து விலகுகிறேன்’ என்று கூறியுள்ளார் திவ்யா.

Advertisement