தமிழ் சீரியலில் ஹிஜாப், நான் தான் ஃபர்ஸ்ட் – எதிர்நீச்சல் சீரியல் நடிகை அதிரடி பதிவு

0
2721
- Advertisement -

முதன்முதலாக ஹிஜாப் அணிந்து எதிர்நீச்சல் சீரியலில் நடித்திருக்கும் நடிகை குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்காக இருக்கும் சீரியலில் ஒன்று சன் டிவி எதிர்நீச்சல். இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. மேலும், இந்த சீரியல் அடக்கு முறைக்கு உட்படும் பெண்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த சீரியலை இயக்குனர் திருச்செல்வம் இயக்கி வருகிறார். இந்த சீரியலில் பிரியதர்ஷினி, ஹரிப்ரியா, மதுமிதா, விபு ராமன், மாரிமுத்து, கமலேஷ், சபரி பிரசாந்த் உட்பட பல நடிகர்கள் நடித்து வருகிறார்கள்.
அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டத்தையும், பெண்களுக்கான உரிமையையும் மையமாக கொண்ட கதை தான் எதிர்நீச்சல். மேலும், மதுரையில் கூட்டு குடும்பமாக அண்ணன், தம்பிகள் வாழ்கிறார்கள்.

- Advertisement -

எதிர்நீச்சல் சீரியல்:

இந்த கூட்டு குடும்பத்தில் ஆண் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த குடும்பத்திற்கு திருமணம் செய்து வரும் பெண்கள் எல்லாம் வீட்டு வேலை செய்யும் வேலைக்காரர்களாக நடத்தி வருகிறார்கள். அதுவும் அதிகம் படித்த பெண்களை தேடி சென்று திருமணம் செய்கிறார்கள். அவர்களை எதிர்த்து எந்த கேள்வியும் கேட்க முடியாமல் அந்த பெண்களும் அமைதியாக இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் தான் ஜனனி இந்த வீட்டின் கடைசி மருமகளாக வருகிறார்.

சீரியலின் கதை:

இவர் அங்கு நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கிறார். இதனால் வீட்டில் பல பிரச்சனைகள் நடக்கிறது. பின் மற்ற பெண்களும் தங்களின் உரிமையை கேட்டு போராடுகிறார்கள். தற்போது சீரியலில் கரிகாலனுக்கும் – ஆதிரைக்கும் திருமணம் நடந்து விட்டது. இது பலருக்குமே ஷாக்கிங் ஆகத்தான் இருந்தது. இன்னொரு பக்கம், ஜீவானந்தம் பட்ட மாவின் மொத்த சொத்தையும் தன்னுடைய பெயருக்கு மாற்றி எழுதி இருக்கிறார். இது வில்லன் குணசேகரனுக்கு தெரியவில்லை. ஜனனி என்ன செய்ய போகிறார்? என்று பல அதிரடி திருப்பங்களுடன் சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது.

-விளம்பரம்-

ஜீபா ஷெரின் குறித்த தகவல்:

மேலும், இந்த சீரியலில் ஜீவானந்தம் கதாபாத்திரத்திற்கு பி.ஏவாக பர்ஹானா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஜீபா ஷெரின். இவர் சமூக புரட்சி செய்யும் பெண்ணாக நடிக்கிறார். நிஜத்திலும் இவர் இப்படி தான். முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் ஆடையை அணிவது குறித்த சர்ச்சைக்கு இவர் தொடர்ந்து குரல் கொடுத்து இருக்கிறார். மேலும், இவர் எதிர்நீச்சல் சீரியலிலும் முஸ்லிம் பெண்ணாகவே நடித்து வருகிறார். எதிர்நீச்சல் சீரியலின் மூலம் இவர் மக்கள் மத்தியில் அறியப்பட்டிருக்கிறார்.

ஜீபா ஷெரின் பதிவிட்ட வீடியோ:

இந்த நிலையில் நடிகை ஜிபா அவர்கள் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், ஒரு முஸ்லிம் நடிகை தமிழ் சீரியலில் ஹிஜாப் அணிந்தபடி நடித்தது நான் தான். எதிர்நீச்சல் சீரியலில் ஒரு பெண் நடிகைக்கு அவருடைய மதத்தின் அடையாளத்தோடு நடிப்பதற்கு வாய்ப்பு கொடுத்த இயக்குனர் திருச்செல்வம் அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்த சீரியலின் மூலம் திருச்செல்வம் புரட்சியை தொடங்கி வைத்திருக்கிறார் என்று கூறி இருக்கிறார்.

Advertisement