Ags இல்லாத அந்த நாற்காலிய பாக்கும் போதே அறியாமல் கண்ணீர் வருது – மாரிமுத்து இல்லாத முதல் எபிசோட். ரசிகர்ளின் கண்ணீர் கமெண்ட்ஸ்

0
880
- Advertisement -

மாரிமுத்து இல்லாத ஒளிபரப்பான எதிர் நீச்சல் முதல் எபிசோடை கண்டு ரசிகர்கள் பலர் வருந்தி வருகின்றனர். அந்த எபிசோட் ப்ரோமோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் டிஆர்பியில் உச்சத்தில் இருக்கும் சீரியல் என்றால் அது எதிர்நீச்சல் தான். தற்போது இந்த சீரியல் தான் பட்டிதொட்டி எங்கும் பிரபலம். இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது.

-விளம்பரம்-

மேலும், இந்த சீரியல் அடக்கு முறைக்கு உட்படும் பெண்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. இந்த சீரியலை இயக்குனர் திருச்செல்வம் இயக்கி வருகிறார். மதுரையில் கூட்டு குடும்பமாக அண்ணன், தம்பிகள் வாழ்கிறார்கள். இந்த கூட்டு குடும்பத்தில் ஆண் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டு இருக்கிறார்கள். அந்த குடும்பத்திற்கு திருமணம் செய்து வரும் பெண்கள் எல்லாம் வீட்டு வேலை செய்யும் வேலைக்காரர்களாக நடத்தி வருகிறார்கள். அதுவும் அதிகம் படித்த பெண்களை தேடி சென்று திருமணம் செய்கிறார்கள்.

- Advertisement -

எதிர்நீச்சல் சீரியல்:

அவர்களை எதிர்த்து எந்த கேள்வியும் கேட்க முடியாமல், அந்த பெண்களும் அமைதியாக இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் தான் ஜனனி இந்த வீட்டின் கடைசி மருமகளாக வருகிறார். ஜனனி அங்கு நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கிறார். இதனால் வீட்டில் பல பிரச்சனைகள் நடக்கிறது. பின் மற்ற பெண்களும் தங்களின் உரிமையை கேட்டு போராடுகிறார்கள். சில மாதங்களாகவே சீரியலில் சொத்து ட்ராக் தான் சென்று கொண்டு இருக்கிறது. சொத்துக்கள் மொத்தம் ஜீவானந்தம் பெயரில் மாறிவிட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆதி குணசேகரன் ஜீவானந்தத்தை பழிவாங்க போலீசாக இருக்கும் கிள்ளிவளவனை சந்தித்து திட்டம் போட்டார்.

சீரியலின் கதை:

ஆனால், ஜீவானந்தம் மனைவி கயிலை சுட்டு விடுகிறார்கள். தன் மனைவிய இழந்த சோகத்தில் ஜீவானந்தம் உடைந்து விடுகிறார். அப்பத்தா ஜீவானந்தத்திற்கு உறுதுணையாக நின்று குணசேகரனின் மீது கேஸ் கொடுக்கிறார். இன்னொரு பக்கம், ஜீவானந்தத்தின் மனைவி கயலை கொன்றது குணசேகரன் மற்றும் கதிர் என்று வீட்டில் உள்ள பெண்கள் எல்லோருக்கும் தெரிய வருகிறது. மேலும், அப்பத்தா தன்னுடைய சொத்து விவகாரம் குறித்து இன்னும் சில நாட்களில் சொல்லி விடுவேன். அதனால் வீட்டுப் பெண்களை யாரும் தொந்தரவு செய்யக்கூடாது. அதேபோல் சக்தி- ஜனனி இருவரும் என்னுடன் தான் இருப்பார்கள். இதற்கு எல்லாம் கட்டுப்பட்டால் நீங்களும் இருக்கலாம். இல்லையென்றால் வீட்டை இரண்டாக பிடித்து விடுவேன் என்று அப்பத்தா மிரட்டுகிறார்.

-விளம்பரம்-

சீரியல் ப்ரோமோ:

எதுவுமே பேசாமல் குணசேகரனும் கதிரும் கிளம்பி விடுகிறார்கள். பின் ஜனனி- சக்தி இருவரும் சேர்ந்து புதிய கம்பெனி ஒன்றை தொடங்க இருக்கிறார்கள். இது தொடர்பாக வீட்டில் உள்ள எல்லோரிடமும் சொல்கிறார்கள். அப்போது குணசேகரன் இந்த வீட்டில் இருந்து கொண்டு எந்த ஒரு புது கம்பெனி தொடங்கக்கூடாது. அது ஆதி குணசேகரன் கம்பெனி மட்டும் தான் என்று சத்தம் போடுகிறார். இறுதியில் குணசேகரின் அம்மா சக்திக்கு தான் தன்னுடைய நகையை கொடுக்கிறார். இதனால் குணசேகரன் கோபத்தில் இருக்கிறார். இனி என்ன நடக்கும் என்ற அதிரடி திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டு இருக்கிறது.

மாரிமுத்து இல்லாத முதல் எபிசோட்:

இப்படி இருக்கும் நிலையில் குணசேகரன் சில தினங்களுக்கு முன்பு மாரடைப்பால் இறந்திருப்பது பலருக்குமே பேரதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சீரியலின் வெற்றிக்கு இவர் தான் காரணம். இப்படி இருக்கும் நிலையில் இவர் இந்த சீரியலில் இனி இல்லை என்று தெரிந்தது ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் கொடுத்திருக்கிறது. இப்படி ஒரு நிலையில் மாரிமுத்து இல்லாத முதல் எபிசோட் ஒளிபரப்பாகி இருக்கிறது. அதில் மாரிமுத்து எப்போதும் அமர்ந்த நாற்காலியில் தற்போது அவர் இல்லை என்பதை பார்த்து ரசிகர்கள் பலர் தங்கள் சோகத்தை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

Advertisement