ஜீவானந்தனுக்கும், அப்பத்தாவுக்கும் என்ன உறவு – மாபெரும் ட்விஸ்ட் வைத்த எதிர்நீச்சல் இயக்குனர்.

0
3574
- Advertisement -

எதிர்நீச்சல் சீரியலில் யாரும் எதிர்பார்க்காத புதிய டிவிஸ்ட் குறித்த புரோமோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்காக இருக்கும் சீரியலில் ஒன்று சன் டிவி எதிர்நீச்சல். இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. மேலும், இந்த சீரியல் அடக்கு முறைக்கு உட்படும் பெண்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த சீரியலை இயக்குனர் திருச்செல்வம் இயக்கி வருகிறார். இந்த சீரியலில் பிரியதர்ஷினி, ஹரிப்ரியா, மதுமிதா, விபு ராமன், மாரிமுத்து, கமலேஷ், சபரி பிரசாந்த் உட்பட பலர் நடித்து வருகிறார்கள். அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டத்தையும், பெண்களுக்கான உரிமையையும் மையமாக கொண்ட கதை தான் எதிர்நீச்சல். மேலும், மதுரையில் கூட்டு குடும்பமாக அண்ணன், தம்பிகள் வாழ்கிறார்கள்.

- Advertisement -

எதிர்நீச்சல் சீரியல்:

இந்த கூட்டு குடும்பத்தில் ஆண் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த குடும்பத்திற்கு திருமணம் செய்து வரும் பெண்கள் எல்லாம் வீட்டு வேலை செய்யும் வேலைக்காரர்களாக நடத்தி வருகிறார்கள். அதுவும் அதிகம் படித்த பெண்களை தேடி சென்று திருமணம் செய்கிறார்கள். அவர்களை எதிர்த்து எந்த கேள்வியும் கேட்க முடியாமல் அந்த பெண்களும் அமைதியாக இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் தான் ஜனனி இந்த வீட்டின் கடைசி மருமகளாக வருகிறார்.

சீரியலின் கதை:

இவர் அங்கு நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கிறார். இதனால் வீட்டில் பல பிரச்சனைகள் நடக்கிறது. பின் மற்ற பெண்களும் தங்களின் உரிமையை கேட்டு போராடுகிறார்கள். மேலும், சீரியலில் கரிகாலனுக்கும் ஆதிரைக்கும் திருமணம் நடந்து விட்டது. இது பலருக்குமே ஷாக்கிங் ஆகத்தான் இருந்தது. வீட்டில் உள்ள பெண்கள் ஒவ்வொருமே தங்கள் பக்கம் நியாயத்தை எதிர்த்து தட்டிக் கேட்கிறார்கள். இதனால் குணசேகரன் என்ன செய்வதென்று புரியாமல் அமைதியாக இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் பட்டமாவின் சொத்தை தன் பெயரில் முழுவதுமாக மாற்றும் வரை எந்த பிரச்சினையும் செய்யக்கூடாது என்பதிலும் உறுதியாக இருக்கிறார்.

-விளம்பரம்-

ஆதிகுணசேகரன் செய்த வேலை:

இப்படி ஒரு நிலையில் சீரியலில் சொத்துக்கள் மொத்தம் ஜீவானந்தம் பெயரில் மாறிவிட்டது என்று வக்கீல் குணசேகரிடம் சொல்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆதி குணசேகரன் மற்றும் அவருடைய தம்பிகள் கம்பெனிக்கு செல்கிறார்கள். இன்னொரு பக்கம் ஜீவானந்தம் யார் என்று கண்டுபிடிக்க ஜனனி செல்கிறார். அடுத்து என்ன நடக்கும் என்ற பரபரப்புடன் சீரியல் சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இன்றைய எபிசோடு ப்ரோமோ வெளியாகியிருக்கிறது.

சீரியல் புது டீவ்ஸ்ட்:

அதில், ஆதி குணசேகரின் மொத்த சொத்தும் ஜீவானந்தத்தின் பெயரில் எழுதி இருப்பது தெரிய வந்திருக்கிறது. அதோடு ஜீவானந்தம் குணசேகரனின் அடியாள் என்று ஜனனி நினைத்து இருக்கிறார். ஆனால், அவர் வேறு ஒரு நபர் என்று தெரிகிறது. முதன்முதலாக ஜீவானந்தத்தை ஜனனி சந்திக்கிறார். இனி ஜீவானந்தத்திற்கும் பட்டம்மாவிற்கும் என்ன உறவு? சொத்துக்கள் உண்மையிலேயே ஜீவானந்தத்தின் பெயரில் மாறிவிட்டதா? இதை வைத்து அவர் என்ன செய்யப் போகிறார்? என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள்.

Advertisement