அப்பத்தாவிற்கு என்ன ஆச்சி, கேள்வி கேட்ட வீட்டு பெண்கள். என்ன செய்ய போகிறார் ஆதி.

0
1455
Ethirneechal
- Advertisement -

எதிர்நீச்சல் சீரியலின் இன்றைய எபிசோடுக்காண ப்ரோமோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் டிஆர்பியில் உச்சத்தில் இருக்கும் சீரியல் எதிர்நீச்சல். தற்போது இந்த சீரியல் தான் பட்டிதொட்டி எங்கும் பிரபலம். இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது.

-விளம்பரம்-

மேலும், இந்த சீரியல் அடக்கு முறைக்கு உட்படும் பெண்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. இந்த சீரியலை இயக்குனர் திருச்செல்வம் இயக்கி வருகிறார். இந்த சீரியலில் இயக்குனர் திருச்செல்வம், ஹரிப்ரியா, மதுமிதா, விபு ராமன், மாரிமுத்து, கமலேஷ், சபரி பிரசாந்த் உட்பட பலர் நடித்து வருகிறார்கள். அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டத்தையும், பெண்களுக்கான உரிமையையும் மையமாக கொண்ட கதை தான் எதிர்நீச்சல்.

- Advertisement -

எதிர்நீச்சல் சீரியல்:

மேலும், மதுரையில் கூட்டு குடும்பமாக அண்ணன், தம்பிகள் வாழ்கிறார்கள். இந்த கூட்டு குடும்பத்தில் ஆண் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள். மேலும், அந்த குடும்பத்திற்கு திருமணம் செய்து வரும் பெண்கள் எல்லாம் வீட்டு வேலை செய்யும் வேலைக்காரர்களாக நடத்தி வருகிறார்கள். அதுவும் அதிகம் படித்த பெண்களை தேடி சென்று திருமணம் செய்கிறார்கள். அவர்களை எதிர்த்து எந்த கேள்வியும் கேட்க முடியாமல், அந்த பெண்களும் அமைதியாக இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் தான் ஜனனி இந்த வீட்டின் கடைசி மருமகளாக வருகிறார்.

சீரியலின் கதை:

ஜனனி அங்கு நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கிறார். இதனால் வீட்டில் அதிக பிரச்சனைகள் நடக்கிறது. பின் மற்ற பெண்களும் தங்களின் உரிமையை கேட்டு போராடுகிறார்கள். தற்போது சீரியலில் சொத்து ட்ராக் தான் சென்று கொண்டு இருக்கிறது. சொத்துக்கள் மொத்தம் ஜீவானந்தம் பெயரில் மாறிவிட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆதி குணசேகரன் வீட்டுப் பெண்களை வைத்து தன்னுடைய விளையாட்டை தொடங்குகிறார். மேலும், ஜீவானந்தத்தை பழிவாங்க, குணசேகரனும் அவருடைய தம்பி கதிரும் சேர்ந்து போலீசாக இருக்கும் கிள்ளிவளவனை சந்தித்து ஜீவானந்தத்தை போட்டு தள்ள முயற்சிக்கிறார்கள்.

-விளம்பரம்-

குணசேகரன் திட்டம்:

இன்னொரு பக்கம் ஜீவானந்தத்தை பற்றி தெரிந்து கொள்ள ஜனனியும் சக்தியும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஜீவானந்தம் மனைவி, மகளை பார்ப்பதற்கு தன்னுடைய வீட்டிற்கு வருகிறார். இங்கு வீட்டில் குணசேகரன், கண் விழித்த அப்பத்தாவிடம் கத்தி புலம்புகிறார். ஆடிட்டர் வக்கீல் வீட்டிற்கு வந்து சொத்து விவரம் குறித்து அப்பத்தாவிடம் கேட்கிறார்கள். பின் அப்பத்தா உண்மை எல்லாம் செல்கிறார். மேலும், ஜீவானந்தம் வீட்டிற்குள் கதிர், வளவனின் ரவுடி கும்பல் நுழைந்து வெட்டப் போகிறார்கள். இதை பார்த்து ஜனனி தடுக்க போகிறார். ஆனால், ஜீவானந்தத்தின் மனைவி கயிலை சுட்டு விடுகிறார் வளவன். பின் அவர்கள் அங்கிருந்து தப்பித்து விடுகிறார்கள். தன் மனைவிய இழந்த சோகத்தில் ஜீவானந்தம் உடைந்து விடுகிறார்.

சீரியல் ப்ரோமோ:

இதை பார்த்து ஜனனி அதிர்ச்சி ஆகிறார். இன்னொரு பக்கம் வீட்டிற்கு வந்த ஜனனி ஜீவானந்தத்தின் மனைவி இறந்த தகவலை கூறுகிறார். இந்த நிலையில் இன்றைய எபிசோடு காண ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் ஜனனி, குணசேகரனின் ஆட்கள் தான் ஜீவானந்தத்தின் மனைவியை கொன்று இருப்பார்கள் என்று சொல்ல நந்தினியும் ஆமாம் எனக்கும் அந்த சந்தேகம் இருக்கிறது என்று சொல்கிறார். பின் வீட்டில் அப்பத்தா காணாமல் போன விஷயம் எல்லோருக்கும் தெரிகிறது. இதனால் கோபப்பட்டு குணசேகரனிடம் எல்லோரும் கேள்வி கேட்கிறார்கள். ஆனால், குணசேகரன் எந்த பதிலும் சொல்லாமல் அனைவரையும் முறைத்துக் கொண்டு நிற்கிறார். உண்மையாலுமே அப்பத்தா காணாமல் போய்விட்டாரா? குணசேகரன் ஏதாவது செய்து விட்டாரா? தன் மனைவி இறப்பிற்கு ஜீவானந்தம் பழி வாங்குவாரா? இதற்கு ஜனனி உதவி செய்வாரா? போன்ற அதிரடி திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

Advertisement