வக்கீலாக ஆஜரான சாரு, தாலியை அறுத்தெறிந்த ஆதிரை, ஜான்சியை அடித்து வெளியில் துரத்திய ஈஸ்வரி – பரபரப்பான கட்டடத்தில் எதிர் நீச்சல்.

0
444
Ethirneechal
- Advertisement -

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் பட்டிதொட்டி எங்கும் பேமஸ் என்றால் அது எதிர்நீச்சல் தான். வாரம் வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் எதிர்நீச்சல் சீரியல் தான் உச்சத்தில் இருக்கிறது. இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. மதுரையில் கூட்டு குடும்பமாக அண்ணன், தம்பிகள் வாழ்கிறார்கள். இந்த கூட்டு குடும்பத்தில் ஆண் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

அந்த குடும்பத்திற்கு திருமணம் செய்து வரும் பெண்கள் எல்லாம் வீட்டு வேலை செய்யும் வேலைக்காரர்களாக நடத்தி வருகிறார்கள். அதுவும் அதிகம் படித்த பெண்களை தேடி சென்று திருமணம் செய்கிறார்கள். அவர்களை எதிர்த்து எந்த கேள்வியும் கேட்க முடியாமல் அந்த பெண்களும் அமைதியாக இருக்கிறார்கள். இந்த நிலையில் தான் ஜனனி இந்த வீட்டின் கடைசி மருமகளாக வருகிறார். இவர் அங்கு நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கிறார். இதனால் வீட்டில் பல பிரச்சனைகள் நடக்கிறது. பின் மற்ற பெண்களும் தங்களின் உரிமையை கேட்டு போராடுகிறார்கள். சில மாதங்களாகவே சீரியலில் சொத்து ட்ராக் தான் சென்று கொண்டு இருக்கிறது.

- Advertisement -

எதிர்நீச்சல் சீரியல்:

இன்னொரு பக்கம், வீட்டு பெண்கள் எல்லோரும் தங்களின் கேரியரில் கவனம் செலுத்தி வந்தார்கள். இதை அறிந்து குணசேகரன் கோபப்படுகிறார். பின் கடந்த வாரம் விபத்தில் அப்பத்தா இறந்து விடுவதைப் போல காண்பிக்கிறார்கள். இதனால் மொத்த வீடுமே சோகத்தில் இருக்கின்றது. இன்னொரு பக்கம், ஜீவானந்தத்தை போலீஸ் கைது செய்து விடுகிறார்கள். அடுத்த நாள் ஈஸ்வரிக்கு கல்லூரியில் இருந்து வேலை செய்வதற்கான ஆர்டர் கிடைக்கிறது. அதை வாங்கி படித்து குணசேகரன் கிழித்து விட்டு வேலைக்கு செல்லக்கூடாது என்று சொல்கிறார். ஆனால், அதையும் மீறி ஈஸ்வரி கல்லூரிக்கு செல்கிறார்.

தேர்தலில் ஈஸ்வரி:

பின் கல்லூரிக்கு குணசேகரன் சென்று வகுப்பறையில் ஈஸ்வரியை குறித்து அவதூறாக பேசுகிறார். இதனால் ஈஸ்வரியை வேலை விட்டு நிறுத்துகிறார்கள். அடுத்து என்ன பண்ணப் போகிறோம் என்று ஆதங்கத்தில் பெண்கள் எல்லாரும் குழம்பிக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் சக்தி- ஜனனி இருவரும் அப்பத்தாவின் கேசை நடத்த சாருபாலாவிடம் கேட்கிறார்கள். அவரும் ஒத்து கொள்கிறார். இப்படி இருக்கும் நிலையில் சேர்மன் பதவிக்கான தேர்தல் நடைபெறுகிறது. இதில் எஸ் கே ஆர் தன்னுடைய மனைவி சாருபாலாவை நிற்க வைக்கிறார். இதை அறிந்த குணசேகரன் ஈஸ்வரியை நிற்க வைக்கிறார். முதலில் ஈஸ்வரி மறுத்தாலும் ஜனனி சொன்னதால் ஈஸ்வரி நிற்கிறார்.

-விளம்பரம்-

போலீஸ் விசாரணையில் குணசேகரன்:

போலீஸ் விசாரணைக்கு குணசேகரனை அழைத்துச் செல்கிறார்கள். ஆனால், அவர்கள் மறுக்கிறார்கள். பின் போலீஸ், வரவில்லை என்றால் குண்டுகட்டாக அள்ளிப் போட்டுக் கொண்டு செல்ல அழைப்பு இருக்கிறது என்றவுடன் பயத்தில் குணசேகரன் அமைதியாக நிற்கிறார். இந்த நிலையில் இன்றைய எபிசோடு ப்ரோமோவில், குணசேகரன் விசாரணைக்கு போலீஸ் உடன் செல்கிறார். அப்போது, ஜனனியை பார்த்து நான் திரும்பி வருவதற்குள் நீங்கள் இரண்டு பேரும் இந்த வீட்டை விட்டு வெளியே போகணும் என்று மிரட்டுகிறார். பின் சாருவை சந்தித்து இந்த அம்மாவுக்கு என்ன வேலை என்று கேட்டவுடன் பொது இடத்தில் யார் வேண்டுமானாலும் இருக்கலாம் என்று சொல்கிறார்.

சீரியல் ப்ரோமோ:

இன்னொரு பக்கம் வீட்டில் ஆதிரை தன் கழுத்தில் இருக்கும் தாலியை கழற்றி போடுகிறார். இதனால் கோபமடைந்த ஜான்சி அவளை போட்டு அடிக்கிறார். இது எல்லாம் பார்த்து ஈஸ்வரி கொந்தளித்து போய் ஜான்சி ராணியை வெளுத்து வாங்குகிறார். விசாலாட்சி எதுவும் சொல்ல முடியாமல் அமைதியாக இருக்கிறார். இறுதியில் பின் எல்லா பெண்களும் சேர்ந்து ஜான்சி ராணியை வெளியே தள்ளுகிறார்கள். இனிவரும் நாட்களில் ஆதிரையின் நிலை என்ன? ஜான்சி ராணி என்ன செய்யப் போகிறாள்? குணசேகரன் கைது செய்யப்படுவாரா? ஜீவானந்தம் மீது போடப்பட்டிருக்கும் பழி நீங்குமா? போன்ற பல அதிரடி திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

Advertisement