ஜீவானந்தம் வீட்டில் ஈஸ்வரி – குணேசகர் பற்றிய உண்மையை சொன்னாரா ? பரபரப்பான கட்டத்தில் எதிர் நீச்சல்.

0
434
Ethirneechal
- Advertisement -

எதிர்நீச்சல் சீரியலின் இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் டிஆர்பியில் உச்சத்தில் இருக்கும் சீரியல் எதிர்நீச்சல். தற்போது இந்த சீரியல் தான் பட்டிதொட்டி எங்கும் பிரபலம். இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. மேலும், இந்த சீரியல் அடக்கு முறைக்கு உட்படும் பெண்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த சீரியலை இயக்குனர் திருச்செல்வம் இயக்கி வருகிறார். மதுரையில் கூட்டு குடும்பமாக அண்ணன், தம்பிகள் வாழ்கிறார்கள். இந்த கூட்டு குடும்பத்தில் ஆண் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள். மேலும், அந்த குடும்பத்திற்கு திருமணம் செய்து வரும் பெண்கள் எல்லாம் வீட்டு வேலை செய்யும் வேலைக்காரர்களாக நடத்தி வருகிறார்கள். அதுவும் அதிகம் படித்த பெண்களை தேடி சென்று திருமணம் செய்கிறார்கள். அவர்களை எதிர்த்து எந்த கேள்வியும் கேட்க முடியாமல், அந்த பெண்களும் அமைதியாக இருக்கிறார்கள்.

- Advertisement -

எதிர்நீச்சல் சீரியல்:

இப்படி இருக்கும் நிலையில் தான் ஜனனி இந்த வீட்டின் கடைசி மருமகளாக வருகிறார். ஜனனி அங்கு நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கிறார். இதனால் வீட்டில் அதிக பிரச்சனைகள் நடக்கிறது. பின் மற்ற பெண்களும் தங்களின் உரிமையை கேட்டு போராடுகிறார்கள். சில மாதங்களாகவே சீரியலில் சொத்து ட்ராக் தான் சென்று கொண்டு இருக்கிறது. சொத்துக்கள் மொத்தம் ஜீவானந்தம் பெயரில் மாறிவிட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆதி குணசேகரன் வீட்டுப் பெண்களை வைத்து தன்னுடைய விளையாட்டை தொடங்குகிறார். மேலும், ஜீவானந்தத்தை பழிவாங்க, குணசேகரனும் அவருடைய தம்பி கதிரும் சேர்ந்து போலீசாக இருக்கும் கிள்ளிவளவனை சந்தித்து ஜீவானந்தத்தை போட்டு தள்ள முயற்சிக்கிறார்கள்.

சீரியலின் கதை:

ஜீவானந்தம் மனைவி, மகளை பார்ப்பதற்கு தன்னுடைய வீட்டிற்கு வருகிறார். அப்போது ஜீவானந்தம் வீட்டிற்குள் கதிர், வளவனின் ரவுடி கும்பல் நுழைந்து வெட்டப் போகிறார்கள். பின் ஜீவானந்தத்தின் மனைவி கயிலை சுட்டு விடுகிறார் வளவன். பின் அவர்கள் அங்கிருந்து தப்பித்து விடுகிறார்கள். தன் மனைவிய இழந்த சோகத்தில் ஜீவானந்தம் உடைந்து விடுகிறார். இதை பார்த்து ஜனனி அதிர்ச்சி ஆகிறார். பின் வீட்டிற்கு வந்த ஜனனி ஜீவானந்தத்தின் மனைவி இறந்த தகவலை கூறுகிறார். மேலும், கண்விழித்த அப்பத்தா ஜீவானந்தத்திற்கு உறுதுணையாக நின்று குணசேகரனின் மீது கேஸ் கொடுக்கிறார்.

-விளம்பரம்-

இன்னொரு பக்கம், ஜீவானந்தத்தின் மனைவி கயலை கொன்றது குணசேகரன் மற்றும் கதிர் என்று வீட்டில் உள்ள பெண்கள் எல்லோருக்கும் தெரிய வருகிறது. இதனால் அனைவருமே பயங்கரமாக கோபப்படுகிறார்கள். இருந்தும் சரியான ஆதாரத்துடன் இவர்களை போலீஸிடம் ஒப்படைக்க வேண்டும் என்று முயற்சிக்கிறார்கள். அதேசமயம் ஜீவானந்தத்துடன் பட்டம்மாள் பாட்டி கிளம்பி விடுகிறார். இருவரும் சொத்தை குணசேகரனுக்கு கொடுக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். இதற்கு வீட்டில் உள்ள பெண்கள் எல்லோருமே உறுதுணையாக இருக்கிறார்கள்.

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் இன்றைய எபிசோடு காண ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில், ஜீவானந்தத்தை சந்திக்க வீட்டில் உள்ள பெண்கள் எல்லோருமே செல்கிறார்கள். அங்கு அவர்கள் ஜீவானந்தத்தையும் அவருடைய மகளையும் சந்தித்து கதறி அழுகிறார்கள். இன்னொரு பக்கம் வீட்டில் ஆதிரை- கரிகாலன் இருவருக்கும் குணசேகரன் ஹனிமூன் ஏற்பாடு செய்திருக்கிறார். ஆனால், செல்ல முடியாது என்று ஆதிரை அடம் பிடிக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த குணசேகரன் உன்னை கொல்லவும் நான் தயங்க மாட்டேன் என்று கூறுகிறார். இனி வரும் காலங்களில் சொத்து முழுவதையும் அடைய குணசேகரன் என்ன செய்யப் போகிறார்? குணசேகரன் தன் மனைவியை கொன்றார் என்று உண்மையை ஜீவானந்தம் அறிவாரா? இதற்கு ஜனனி உறுதியாக இருப்பாரா? ஆதிரை கரிகாலனின் நிலைமை என்ன? என்ற பல அதிரடி திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

Advertisement