ஈஸ்வரி – ஜீவனந்தத்தின் ex காதல் விஷயம், குணசேகரன் எடுத்த அதிரடி முடிவு. பரபரப்பான கட்டத்தில் எதிர் நீச்சல்.

0
2595
Ethirneechal
- Advertisement -

எதிர்நீச்சல் சீரியலில் இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் டிஆர்பியில் உச்சத்தில் இருக்கும் சீரியல் என்றால் அது எதிர்நீச்சல் தான். தற்போது இந்த சீரியல் தான் பட்டிதொட்டி எங்கும் பிரபலம். இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது.

-விளம்பரம்-
Ethirneechal

மேலும், இந்த சீரியல் அடக்கு முறைக்கு உட்படும் பெண்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. இந்த சீரியலை இயக்குனர் திருச்செல்வம் இயக்கி வருகிறார். மதுரையில் கூட்டு குடும்பமாக அண்ணன், தம்பிகள் வாழ்கிறார்கள். இந்த கூட்டு குடும்பத்தில் ஆண் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டு இருக்கிறார்கள். மேலும், அந்த குடும்பத்திற்கு திருமணம் செய்து வரும் பெண்கள் எல்லாம் வீட்டு வேலை செய்யும் வேலைக்காரர்களாக நடத்தி வருகிறார்கள்.

- Advertisement -

எதிர்நீச்சல் சீரியல்:

அதுவும் அதிகம் படித்த பெண்களை தேடி சென்று திருமணம் செய்கிறார்கள். அவர்களை எதிர்த்து எந்த கேள்வியும் கேட்க முடியாமல், அந்த பெண்களும் அமைதியாக இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் தான் ஜனனி இந்த வீட்டின் கடைசி மருமகளாக வருகிறார். ஜனனி அங்கு நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கிறார். இதனால் வீட்டில் பல பிரச்சனைகள் நடக்கிறது. பின் மற்ற பெண்களும் தங்களின் உரிமையை கேட்டு போராடுகிறார்கள். சில மாதங்களாகவே சீரியலில் சொத்து ட்ராக் தான் சென்று கொண்டு இருக்கிறது.

சீரியலின் கதை:

சொத்துக்கள் மொத்தம் ஜீவானந்தம் பெயரில் மாறிவிட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆதி குணசேகரன் ஜீவானந்தத்தை பழிவாங்க போலீசாக இருக்கும் கிள்ளிவளவனை சந்தித்து ஜீவானந்தத்தை போட்டு தள்ள திட்டம் போட்டார்கள். பின் ஜீவானந்தம் மனைவி கயிலை சுட்டு விடுகிறார்கள். தன் மனைவிய இழந்த சோகத்தில் ஜீவானந்தம் உடைந்து விடுகிறார். மேலும், கண்விழித்த அப்பத்தா ஜீவானந்தத்திற்கு உறுதுணையாக நின்று குணசேகரனின் மீது கேஸ் கொடுக்கிறார். இன்னொரு பக்கம், ஜீவானந்தத்தின் மனைவி கயலை கொன்றது குணசேகரன் மற்றும் கதிர் என்று வீட்டில் உள்ள பெண்கள் எல்லோருக்கும் தெரிய வருகிறது.

-விளம்பரம்-

உண்மை அறிந்த குணசேகரன்:

இதற்கு வீட்டில் உள்ள பெண்கள் எல்லோருமே உறுதுணையாக இருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் ஈஸ்வரியின் தந்தை குணசேகரின் வீட்டிற்கு வந்து ஜீவானந்தம் தான் என்னுடைய மகளை காதலித்தவன். அதனால் தான் நான் திருமணம் செய்து விட்டேன் என்று கூறுகிறார். இதைக் கேட்டு குணசேகரன் அதிர்ச்சி அடைந்து உட்காருகிறார். பின் ஆத்திரமடைந்த குணசேகரன் ஈஸ்வரியை தகாத வார்த்தைகளால் பேசி காயப்படுத்துகிறார். இதைக் கேட்ட பிள்ளைகளும் கோபப்படுகிறார்கள். பிள்ளைகள் இருவரும் தன்னுடைய அம்மாவிற்கு ஆதரவாக நிற்கிறார்கள்.

சீரியல் ப்ரோமோ:

அடுத்த நாள் குணசேகரன் பெரியவர்கள் எல்லாம் வீட்டிற்கு அழைத்து எங்களை பிரித்து விடுங்கள் என்று கூறுகிறார். இதைக் கேட்டு ஈஸ்வரியின் தந்தை என் மகளின் ஒழுக்கத்தை மீது சந்தேகம் பட்டாயா என்று கோபப்பட்டு பேசுகிறார். ஈஸ்வரியும் எதுவும் பேசாமல் அமைதியாக நிற்கிறார். குணசேகரன் தன் வாய்க்கு வந்தபடி எல்லாம் ஈஸ்வரியை தப்பாக பேசுகிறார். இப்படி இருக்கும் நிலையில் தான் அப்பத்தா போலீஸுடன் வீட்டிற்கு வருகிறார். இனிவரும் நாட்களில் அப்பத்தா எதற்கு வீட்டிற்கு வந்தார்? ஈஸ்வரி குணசேகரன் விட்டு தனியாக வந்து விடுவாரா? ஈஸ்வரிக்கு அவருடைய பிள்ளைகள் உறுதுணையாக இருப்பாரா? குணசேகரன் அடுத்து என்ன செய்யப் போகிறார்? இது எல்லாம் ஜீவானந்தரத்திற்கு தெரிய வருமா? போன்ற பல அதிரடித்திருப்புகளுடன் சீரியல் செல்ல இருக்கிறது.

Advertisement