கதிரை கடத்திய ஜீவானந்தம், குணசேகரன் திட்டம் நிறைவேறுமா? பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல்

0
309
- Advertisement -

எதிர்நீச்சல் சீரியலின் இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ தற்போது வைரலாகி வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் டிஆர்பியில் உச்சத்தில் இருக்கும் சீரியல் என்றால் அது எதிர்நீச்சல் தான். தற்போது இந்த சீரியல் தான் பட்டிதொட்டி எங்கும் பேமஸ். இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. மேலும், இந்த சீரியல் அடக்கு முறைக்கு உட்படும் பெண்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த சீரியலை இயக்குனர் திருச்செல்வம் இயக்கி வருகிறார். மதுரையில் கூட்டு குடும்பமாக அண்ணன், தம்பிகள் வாழ்கிறார்கள். இந்த கூட்டு குடும்பத்தில் ஆண் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டு இருக்கிறார்கள். அந்த குடும்பத்திற்கு திருமணம் செய்து வரும் பெண்கள் எல்லாம் வீட்டு வேலை செய்யும் வேலைக்காரர்களாக நடத்தி வருகிறார்கள். அதுவும் அதிகம் படித்த பெண்களை தேடி சென்று திருமணம் செய்கிறார்கள். அவர்களை எதிர்த்து எந்த கேள்வியும் கேட்க முடியாமல் அந்த பெண்களும் அமைதியாக இருக்கிறார்கள்.

- Advertisement -

எதிர்நீச்சல் சீரியல்:

இப்படி இருக்கும் நிலையில் தான் ஜனனி இந்த வீட்டின் கடைசி மருமகளாக வருகிறார். ஜனனி அங்கு நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கிறார். இதனால் வீட்டில் பல பிரச்சனைகள் நடக்கிறது. பின் மற்ற பெண்களும் தங்களின் உரிமையை கேட்டு போராடுகிறார்கள். சில மாதங்களாகவே சீரியலில் சொத்து ட்ராக் தான் சென்று கொண்டு இருக்கிறது. சொத்துக்கள் மொத்தம் ஜீவானந்தம் பெயரில் மாறிவிட்டது. இன்னொரு பக்கம், வீட்டு பெண்கள் எல்லோரும் தங்களின் கேரியரில் கவனம் செலுத்தி வந்தார்கள். பின் இதை குணசேகரன் கண்டுபிடித்து பிரச்சனை செய்து விடுகிறார்.?

சீரியலின் கதை:

மேலும், மாரிமுத்து மறைவுக்கு பிறகு ஆதி குணசேகரனாக வேலராமமூர்த்தி என்ட்ரி ஆகியிருந்தார். முதல் நாளே இவர் போலீசாரை எட்டி உதைத்தது அதிரடியாக இருந்தது. பின் இவர் வீட்டிற்கு வந்து வழக்கம் போல் பெண்களிடம் கடுமையாக பேசி ஈஸ்வரியை வெளுத்து வாங்கி இருக்கிறார். இதனால் அனைவருமே என்ன செய்வதென்று புரியாமல் அதிர்ந்து போய் இருக்கிறார்கள். அதன் பின் குணசேகரனை போலீஸ் செய்து இருந்தது. இதனால் குணசேகரன் இல்லாமல் கதையை நகர்த்த இயக்குனர் திட்டமிட்டு இருக்கிறார்.

-விளம்பரம்-

திருவிழா எபிசோட்:

மேலும், சீரியலை விறுவிறுப்பாக கொண்டு செல்ல இயக்குனர் புது வில்லனை அறிமுகம் செய்திருக்கிறார். அவருடைய பெயர் கிருஷ்ணா மெய்யப்பன். சீரியலில் ஜனனி- சக்தி சேர்ந்து வாங்க நினைக்கும் கம்பெனியை கிருஷ்ணன் மெய்ப்பன் வாங்க இருக்கிறார். இவரும் மிகப்பெரிய பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர். முதல் நாளே இவருடைய மாஸ் என்றியும் டயலாக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. பின் வீட்டுப் பெண்கள் எல்லோரும் திருவிழாவிற்கு அப்பத்தா வீட்டிற்கு வந்து விடுகிறார்கள். இன்னொரு பக்கம் குணசேகரன் ஜெயிலில் இருந்து வீட்டிற்கு வந்து விடுகிறார்.

சீரியல் ப்ரோமோ:

இந்த நிலையில் இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ தான் வெளியாகியிருக்கிறது. அதில் கதிர் ஒரு பெண்ணுடன் ஜாலியாக பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது ஜீவானந்தத்தின் ஆட்கள் கதிரை கடத்தி விடுகிறார்கள். இன்னொரு பக்கம் குணசேகரன் திருவிழாவிற்கு வந்து வழக்கம் போல எல்லோரையும் கடுமையாக பேசி திட்டிக் கொண்டிருக்கிறார். கதிர் வருவான் தன்னுடைய திட்டத்தை எல்லாம் நிறைவேற்றுவார் என்று குணசேகரன் நினைத்துக் கொண்டிருக்கிறார். இனி வரும் நாட்களில் ஜீவானந்தம் சொன்னபடி கதிர், குணசேகரனை பழிவாங்குவாரா? குணசேகரன் திட்டப்படி அப்பத்தா, ஜீவானந்தம் கதை முடிப்பாரா? என்ன நடக்கப் போகிறது என்ற பரபரப்பான திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

Advertisement