எதிர் நீச்சல் சீரியலில் இருந்து விலக முடிவெடுத்த ஆதிரை – அவரே சொன்ன ஷாக்கிங் தகவல்

0
1966
- Advertisement -

எதிர்நீச்சல் சீரியலை விட்டு ஆதிரை கதாபாத்திரத்தில் நடித்த சத்யா விலக நினைத்திருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது ட்ரெண்டிங்காக இருக்கும் சீரியலில் ஒன்று சன் டிவி எதிர்நீச்சல். இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. மேலும், இந்த சீரியல் அடக்கு முறைக்கு உட்படும் பெண்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது.

-விளம்பரம்-

மேலும், அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டத்தையும், பெண்களுக்கான உரிமையையும் மையமாக கொண்ட கதை தான் எதிர்நீச்சல். மதுரையில் கூட்டு குடும்பமாக அண்ணன், தம்பிகள் வாழ்கிறார்கள். இவர்கள் இந்த கூட்டு குடும்பத்தில் ஆண் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த குடும்பத்திற்கு திருமணம் செய்து வரும் பெண்கள் எல்லாம் வீட்டு வேலை செய்யும் வேலைக்காரர்களாக நடத்தி வருகிறார்கள். அதுவும் அதிகம் படித்த பெண்களை தேடி சென்று திருமணம் செய்கிறார்கள்.

- Advertisement -

எதிர்நீச்சல் சீரியல்:

அவர்களை எதிர்த்து எந்த கேள்வியும் கேட்க முடியாமல் அந்த பெண்களும் அமைதியாக இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் தான் ஜனனி இந்த வீட்டின் கடைசி மருமகளாக வருகிறார். இவர் அங்கு நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கிறார். இதனால் வீட்டில் பல பிரச்சனைகள் நடக்கிறது. இதனால் மற்ற பெண்களும் தங்களின் உரிமையை கேட்டு போராடுகிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க, சில மாதங்களாகவே சீரியலில் ஆதிரை- அருண் குறித்த காட்சிகள் தான் ஒளிபரப்பாகி வருகிறது.

சீரியலின் கதை:

ஆதிரை- அருண் திருமணத்தை எப்படியாவது நடத்தி வைக்க வேண்டும் என்று வீட்டில் உள்ள பெண்கள் எல்லோரும் திட்டம் போடுகிறார்கள். ஆனால், கரிகாலனுக்கும் ஆதிரைக்கும் திருமணம் நடந்து விட்டது. இது பலருக்குமே ஷாக்கிங் ஆகத்தான் இருக்கிறது. இனி கரிகாலனுடன் ஆதிரை சேர்ந்து வாழ்வாரா?அருணின் நிலைமை என்ன? குணசேகரனின் எண்ணம் நிறைவேறுமா? என பல அதிரடி திருப்பங்களுடன் சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது.

-விளம்பரம்-

சத்யா குறித்த தகவல்:

மேலும், இந்த சீரியலில் ஆதிரை என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து இருப்பவர் சத்யா தேவராஜன். இவர் மாடலிங் மூலம் தான் தன்னுடைய கேரியரை தொடங்கினார். அதற்கு பின் இவர் சன் மியூசிக் சேனலில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். அதற்கு பிறகு இவர் அருவி என்ற சீரியலின் மூலம் தான் நடிகையாக நடிக்க தொடங்கினார். இருந்தாலும், இவரை மக்கள் மத்தியில் பிரபலமாக்கியது எதிர்நீச்சல் சீரியல் தான். தற்போது இந்த சீரியலில் ஆதிரை கதாபாத்திரம் ட்ராக் தான் முன்னிலை வகிக்கிறது.

சத்யா அளித்த பேட்டி:

இந்நிலையில் சமீபத்தில் ஆதிரை கதாபாத்திரத்தில் நடிக்கும் சத்யா அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருந்தது, ஆரம்பத்தில் எதிர்நீச்சல் சீரியலில் நான் நெகட்டிவ் ரோலில் நடித்திருந்தேன். எனக்கு நிறைய எதிர்மறை விமர்சனங்கள் வந்தது. இதனால் இந்த தொடரில் நடிப்பதை விட்டு போய்விடலாம் என்று நினைத்தேன். அதற்குப்பின் என்னை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று நினைத்தேன். அதற்கு ஏற்றவாறு என்னுடைய கதாபாத்திரமும் மாறியது. தற்போது மக்கள் என்னை ஏற்றுக் கொண்டார்கள் என்று கூறி இருந்தார்.

Advertisement