போலீசுக்கு கிடைத்த மாணவியின் உடல், கதறி அழும் ஈஸ்வரி- தர்ஷினி இறந்துவிட்டாரா? விறுவிறுப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல்

0
489
- Advertisement -

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் பட்டிதொட்டி எங்கும் பேமஸ் என்றால் அது எதிர்நீச்சல் தான். இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. மதுரையில் கூட்டு குடும்பமாக அண்ணன், தம்பிகள் வாழ்கிறார்கள். இந்த கூட்டு குடும்பத்தில் ஆண் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டு இருக்கிறார்கள். அந்த குடும்பத்திற்கு திருமணம் செய்து வரும் பெண்கள் எல்லாம் வீட்டு வேலை செய்யும் வேலைக்காரர்களாக நடத்தி வருகிறார்கள். அதுவும் அதிகம் படித்த பெண்களை தேடி சென்று திருமணம் செய்கிறார்கள்.

-விளம்பரம்-

அவர்களை எதிர்த்து எந்த கேள்வியும் கேட்க முடியாமல் அந்த பெண்களும் அமைதியாக இருக்கிறார்கள். இந்த நிலையில் தான் ஜனனி இந்த வீட்டின் கடைசி மருமகளாக வருகிறார். இவர் அங்கு நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கிறார். இதனால் வீட்டில் பல பிரச்சனைகள் நடக்கிறது. பின் மற்ற பெண்களும் தங்களின் உரிமையை கேட்டு போராடுகிறார்கள். சில வாரங்களாகவே சீரியலில் தேர்தல் ட்ராக் தான் சென்று கொண்டு இருந்தது. பின் கடந்த வாரம் குணசேகரன் மகள் தர்ஷினி திருமணம் குறித்து தான் சென்று கொண்டு இருக்கிறது.

- Advertisement -

எதிர்நீச்சல் சீரியல்:

தற்போது சீரியலில் தர்ஷினி கடத்தல் டிராக் தான் சென்று கொண்டிருக்கின்றது. தன் தந்தை குத்து சண்டை விளையாட்டுக்கு போகக்கூடாது என்று சொன்னவுடன் சோகத்தில் தர்ஷினி பள்ளியிலிருந்து வீட்டுக்கு வந்து கொண்டிருக்கிறார். அப்போது அவரை மர்ம நபர்கள் கடத்தி விடுகிறார்கள். தர்ஷினி காணவில்லை என்று அவருடைய அம்மா, சித்திமார்கள் எல்லாம் அலைந்து கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் குணசேகரன், விசாலாட்சி இருவரும் தர்ஷினியை மறைத்து வைத்திருப்பதே ஈஸ்வரி தான்.

சீரியல் கதை:

அவர்கள் நாடகம் ஆடுகிறார்கள் என்று வழக்கம்போல் ஈஸ்வரி மற்றும் மற்ற பெண்களை தான் குறை சொல்லி கொண்டிருக்கிறார்கள். யாரும் எதிர்பாராத வகையில் கதிர், ஞானம் திருந்தி அவர் அண்ணனுக்கு எதிராகவே பேசுகிறார்கள். தர்ஷினியை தேட செல்கிறார்கள். இதனால் ஆத்திரம் தாங்காத குணசேகரன், கதிர்- ஞானம் இருவரையும் திட்டுகிறார். பின் ஜீவானந்தம் தான் என் மகளை கடத்தி இருப்பான். ஜீவானந்திடம் தான் என் மகளை ஈஸ்வரி ஒப்படைத்திருப்பார். அதனால் ஜீவானந்தத்தை கைது செய்ய வேண்டும் என்று போலீஸிடம் புகார் கொடுக்கிறார் குணசேகரன்.

-விளம்பரம்-

தர்ஷினி நிலைமை:

போலீசும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. நேற்று எபிசோடில் தர்ஷினியை கடத்தி சென்ற கார் குறித்த விவரத்தை கண்டறிந்து சக்தி, ஜனனி, ஈஸ்வரி எல்லோருமே செல்கிறார்கள். இன்னொரு பக்கம், தர்ஷினியை கடத்தி வைத்திருக்கும் கும்பலை காண்பிக்கிறார்கள். எப்படியோ தர்ஷினி தப்பித்து வெளியே ஓடுகிறார். இருந்தாலும், அந்த கும்பலிடம் மாட்டிக் கொள்கிறார். அப்போது நபர் ஒருவர் அவளை தாக்க பார்க்கிறார். பின் போலீஸ் ஜனனிக்கு கால் செய்து ஒரு மலை பக்கத்தில் மாணவியின் உடல் கிடைக்கிறது. அது தர்ஷினியா? வந்து பாருங்கள் என்று சொல்கிறார்.

சீரியல் ப்ரோமோ:

இதனால் அனைவருமே கதறி அழுகிறார்கள். இந்நிலையில் இன்றைய எபிசோடு காண ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில், ஜனனி- சக்தி எல்லோரும் அந்த மாணவியின் உடல் இருக்கும் இடத்திற்கு சென்று கதறி அழுது கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் வீட்டில் கதிர்- ஞானம் இருவரும் தர்ஷினியை தேட கிளம்பும்போது குணசேகரன் என் மகளை தேட நீங்கள் யார்? என்று சண்டை போடுகிறார். இனிவரும் நாட்களில் உண்மையாலுமே தர்ஷினி இறந்துவிட்டாரா? தர்ஷினிக்கு என்ன ஆனது? யார் தர்ஷினியை கடத்தினார்கள்? குணசேகரனின் திட்டம் என்ன? போன்ற பல அதிரடி திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

Advertisement